LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வளைகுடா நாடுகள்

சவுதி அரேபியாவில் இந்தியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை உயர்வு

 

சவுதி அரேபியாவில் பணியாற்றும் இந்தியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை கடந்த 2023-24 நிதியாண்டில்  இரண்டு லட்சம் உயர்ந்துள்ளது.
 
மேற்கு ஆசிய நாடான சவுதி அரேபியாவில் கட்டுமானம், உள்கட்டமைப்பு, சேவைகள் போன்ற துறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியால் பதிவுசெய்யப்பட்ட இந்திய நிறுவனங்களின் எண்ணிக்கை 2023-24-ல் 3 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
 
அதேவேளையில் அங்குப் பணியாற்றும் இந்தியத் தொழிலாளர் எண்ணிக்கை 2 லட்சம் அதிகரித்து, 26.5 லட்சமாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டை விட 10 சதவீத உயர்வு ஆகும். இதுபோல் நடப்பு நிதியாண்டிலும் (2024-25) இந்தியத் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் என நம்பப்படுகிறது. .
 
இதுகுறித்து சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள இந்தியத் தூதர் சுகல் அஜாஸ் கான் கூறுகையில், “சவுதி அரேபியாவில் உள்ள இந்திய சமூகத்தினர் இரு நாடுகளுக்கும் இடையே உயிரோட்டமுள்ள பாலமாக விளங்குகின்றனர். சவுதி அரேபியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியர்களின் பங்களிப்பு பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது" என்றார்.
 
2030-ம் ஆண்டு தொலைநோக்கு திட்டத்தின் கீழ் எண்ணெய் அல்லாத வருவாயை அதிகரிப்பதை நோக்கி சவுதி அரசு நகர்ந்து வருகிறது. இதனால் உற்பத்தி, சுற்றுலா, பசுமை எரிசக்தி போன்ற துறைகளில் வெளிநாட்டினர் உட்பட அதிக நிபுணர்களைப் பணியமர்த்துவதில் கவனம் செலுத்தி வருகிறது.
 
இந்நிலையில் சவுதி அரேபிய அரசின் தகாமோல் ஹோல்டிங் என்ற மனித வள நிறுவனத்துடன் இந்திய அரசு திறன் சரிபார்ப்பு ஒப்பந்தம் செய்துகொண்டது. இதன்படி கடந்த 2022-ம் ஆண்டு முதல், இந்தியாவின் தேசியத் திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் இந்தியத் தொழிலாளர்களுக்குப் பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கி வருகிறது.
 
இதனால் திறமையான ஆட்களை சவுதி அதிகாரிகள் பணியில் அமர்த்தி வருகின்றனர். மேலும் பணியமர்த்தும் செயல்முறையை நெறிப்படுவதிலும் பணியாளர்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.
 
கடந்த 2019-ல் சவுதி அரேபியாவில் பதிவு செய்யப்பட்ட இந்திய நிறுவனங்களின் எண்ணிக்கை 400 ஆக இருந்தது. இது 2023 ஆகஸ்டில் 3 ஆயிரமாக அதிகரித்து மொத்த முதலீடு 3 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

 

by hemavathi   on 03 Feb 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
17 மணி நேர திக் திக் பயணம் - பத்திரமாகப் பூமி திரும்பினர் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் 17 மணி நேர திக் திக் பயணம் - பத்திரமாகப் பூமி திரும்பினர் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள்
2 நாள்களில் பூமிக்குத் திரும்பும் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் 2 நாள்களில் பூமிக்குத் திரும்பும் சுனிதா வில்லியம்ஸ், புட்ச்
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதில் மீண்டும் காலதாமதம் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதில் மீண்டும் காலதாமதம்
நாசாவில் பணியாற்றிய 23 பேர் பணி நீக்கம் நாசாவில் பணியாற்றிய 23 பேர் பணி நீக்கம்
இந்தியா உடனான உறவை மீண்டும் கட்டியெழுப்புவோம் -  கனடாவின்  புதிய பிரதமர்  மார்க் கார்னி இந்தியா உடனான உறவை மீண்டும் கட்டியெழுப்புவோம் - கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி
சுனிதா வில்லியம்ஸ், வில்மோர்   மார்ச் 19  அல்லது  20 -ல்  பூமிக்குத் திரும்புகிறார்கள்  - நாசா அறிவிப்பு சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் மார்ச் 19 அல்லது 20 -ல் பூமிக்குத் திரும்புகிறார்கள் - நாசா அறிவிப்பு
பாகிஸ்தானின் சிந்து நதிப் பகுதியில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான  தங்கப் படிமம் பாகிஸ்தானின் சிந்து நதிப் பகுதியில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான தங்கப் படிமம்
பாகிஸ்தானின் சிந்து நதிப் பகுதியில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான  தங்கப் படிமம் பாகிஸ்தானின் சிந்து நதிப் பகுதியில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான தங்கப் படிமம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.