|
||||||||
பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் மிக உயரிய விருது |
||||||||
அரசுமுறைப் பயணமாக குவைத் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினர் ஒன்று சேர்ந்து பிரதமர் மோடியை வரவேற்றனர்.
வளைகுடா ஸ்பிக் தொழிலாளர் முகாமிற்குச் சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள இந்தியத் தொழிலாளர்களைச் சந்தித்து நலம் விசாரித்தார். அவர்களுடன் உற்சாகமாகக் கலந்துரையாடினார்.
பிறகு, குவைத்தின் ஷேக் சாத் அல் அப்துல்லா விளையாட்டு உள்ளரங்கில், ஹாலா மோடி என்ற தலைப்பில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
குவைத் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருது இதற்கு முன்பாக பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ், சார்லஸ் உள்ளிட்ட தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
|
||||||||
by hemavathi on 22 Dec 2024 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|