LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் காலமானார்

 

உலகின் சிறந்த தபேலா இசைக் கலைஞர்களில் ஒருவரான ஜாகிர் ஹுசைன் காலமானார். அவருக்கு வயது 73.
புகழ்பெற்ற இந்திய இசைக் கலைஞரான ஜாகிர் ஹுசைன் நுரையீரல் நோய்ப் பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
1951-ஆம் ஆண்டு பிறந்த அவர்,1988 இல் பத்மஸ்ரீ, 2002 இல் பத்ம பூஷன் மற்றும் 2023 இல் பத்ம விபூஷன் ஆகிய விருதுகளைப் பெற்றார்.
நான்கு முறை கிராமி விருதினை ஜாகிர் ஹுசைன் பெற்றுள்ளார். முதல் முறையாக 2009-ஆம் ஆண்டு கிராமி விருதினை ஜாகிர் ஹுசைன் வென்றார். 'குளோபல் ட்ரம் ப்ராஜெக்ட்' என்ற படைப்புக்காக அவருக்கு இது வழங்கப்பட்டது.
இதற்காக அவர் மிக்கி ஹார்ட் மற்றும் ஜோவ்வானி ஹிடல்கோ ஆகிய இசைக்கலைஞர்களுடன் இணைந்து பணிபுரிந்தார்."சிறந்த கான்டெம்ப்ரரி வேர்ல்ட் மியூசிக் ஆல்பம்" என்ற பிரிவில் இந்த விருதை இவர் வென்றிருந்தார்.
இதைத் தொடர்ந்து 2024-ஆம் ஆண்டு நடந்த 66 வது கிராமி விருது விழாவில் மூன்று விருதுகளை இவர் வென்றார்.
'ஆஸ் வீ ஸ்பீக்' என்ற பாடலுக்காக சிறந்த கான்டெம்ப்ரரி இன்ஸ்ட்ரூமென்டல் ஆல்பம் என்ற பிரிவில் ஒன்று, 'திஸ் மோமென்ட்' என்ற பாடலுக்காகச் சிறந்த குளோபல் மியூசிக் ஆல்பம் என்ற பிரிவில் ஒன்று, மேலும் 'பாஷ்டோ' என்ற பாடலுக்காக சிறந்த குளோபல் மியூசிக் பெர்ஃபார்மன்ஸ் என்ற பிரிவில் ஒன்று என மொத்தம் மூன்று விருதுகளை அவர் வென்றார்.
தபேலா இசைக் கலைஞர் உஸ்தாத் அல்லா ரக்கா கானின் மகனான ஜாஹிர் ஹுசேன் தனது ஏழாம் வயதில் முதல் இசைக் கச்சேரியில் பங்கேற்றார்.
ஜாகிர் ஹுசைன், இந்திய இசைத்துறை மட்டுமன்றி உலகளாவிய மேடைகளில் தனது இசையால் அறியப்பட்டவர். அவர் தி பீட்டில்ஸ் உட்பட பல மேற்கத்திய இசைக்கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றிப் புகழ் பெற்றவர்.
அவருக்கு உலகம் முழுக்க மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உலகின் சிறந்த தபேலா இசைக் கலைஞர்களில் ஒருவரான ஜாகிர் ஹுசைன் காலமானார். அவருக்கு வயது 73.
புகழ்பெற்ற இந்திய இசைக் கலைஞரான ஜாகிர் ஹுசைன் நுரையீரல் நோய்ப் பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

1951-ஆம் ஆண்டு பிறந்த அவர்,1988 இல் பத்மஸ்ரீ, 2002 இல் பத்ம பூஷன் மற்றும் 2023 இல் பத்ம விபூஷன் ஆகிய விருதுகளைப் பெற்றார்.

நான்கு முறை கிராமி விருதினை ஜாகிர் ஹுசைன் பெற்றுள்ளார். முதல் முறையாக 2009-ஆம் ஆண்டு கிராமி விருதினை ஜாகிர் ஹுசைன் வென்றார். 'குளோபல் ட்ரம் ப்ராஜெக்ட்' என்ற படைப்புக்காக அவருக்கு இது வழங்கப்பட்டது.

இதற்காக அவர் மிக்கி ஹார்ட் மற்றும் ஜோவ்வானி ஹிடல்கோ ஆகிய இசைக்கலைஞர்களுடன் இணைந்து பணிபுரிந்தார்."சிறந்த கான்டெம்ப்ரரி வேர்ல்ட் மியூசிக் ஆல்பம்" என்ற பிரிவில் இந்த விருதை இவர் வென்றிருந்தார்.இதைத் தொடர்ந்து 2024-ஆம் ஆண்டு நடந்த 66 வது கிராமி விருது விழாவில் மூன்று விருதுகளை இவர் வென்றார்.

'ஆஸ் வீ ஸ்பீக்' என்ற பாடலுக்காக சிறந்த கான்டெம்ப்ரரி இன்ஸ்ட்ரூமென்டல் ஆல்பம் என்ற பிரிவில் ஒன்று, 'திஸ் மோமென்ட்' என்ற பாடலுக்காகச் சிறந்த குளோபல் மியூசிக் ஆல்பம் என்ற பிரிவில் ஒன்று, மேலும் 'பாஷ்டோ' என்ற பாடலுக்காக சிறந்த குளோபல் மியூசிக் பெர்ஃபார்மன்ஸ் என்ற பிரிவில் ஒன்று என மொத்தம் மூன்று விருதுகளை அவர் வென்றார்.

தபேலா இசைக் கலைஞர் உஸ்தாத் அல்லா ரக்கா கானின் மகனான ஜாஹிர் ஹுசேன் தனது ஏழாம் வயதில் முதல் இசைக் கச்சேரியில் பங்கேற்றார்.

ஜாகிர் ஹுசைன், இந்திய இசைத்துறை மட்டுமன்றி உலகளாவிய மேடைகளில் தனது இசையால் அறியப்பட்டவர். அவர் தி பீட்டில்ஸ் உட்பட பல மேற்கத்திய இசைக்கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றிப் புகழ் பெற்றவர்.அவருக்கு உலகம் முழுக்க மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

by hemavathi   on 16 Dec 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விசா இல்லாமல் 62 நாடுகளுக்கு இந்தியர்கள் செல்லலாம் விசா இல்லாமல் 62 நாடுகளுக்கு இந்தியர்கள் செல்லலாம்
பிரதமர் மோடிக்கு அமெரிக்கப் பாடகி மேரி மில்பென் பாராட்டு பிரதமர் மோடிக்கு அமெரிக்கப் பாடகி மேரி மில்பென் பாராட்டு
இனி வருங்கால வைப்பு நிதிப் பணத்தை ஏ.டி.எம் -மி்ல் எடுக்கலாம் இனி வருங்கால வைப்பு நிதிப் பணத்தை ஏ.டி.எம் -மி்ல் எடுக்கலாம்
இந்தியாவில் 16.9 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் இந்தியாவில் 16.9 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள்
கேவின்கேர் ,MMA , FWC  இணைந்து நடத்திய  சின்னிகிருஷ்ணன் கண்டுபிடிப்பாளர்  விருது விழாவில் , சாஷே புரட்சியின் தந்தை நூல் வெளியிடப்பட்டது. கேவின்கேர் ,MMA , FWC இணைந்து நடத்திய சின்னிகிருஷ்ணன் கண்டுபிடிப்பாளர் விருது விழாவில் , சாஷே புரட்சியின் தந்தை நூல் வெளியிடப்பட்டது.
உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல். நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்.
நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு. நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.