அனைத்துலக சிறந்த படைப்பாக ‘வீரயுகநாயகன் வேள்பாரி’ நாவல் தேர்வு
மலேசியாவின் பான்ஸ்ரீ கே. ஆர் சோமா மொழி இலக்கிய அறிவாரியத்தின் சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘அனைத்துலக சிறந்த படைப்புக்கான விருது வழங்கப்படும். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான விருது, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் அவர்கள் எழுதிய ‘வீரயுக வேள்பாரி’ நாவலுக்கு வழங்கப்பட்டுள்ளது. வீரயுக வேள்பாரி நாவல் இயற்றப்பட்ட காலம் முதல் இன்று வரை தனக்கென பெரும் வாசகர் வட்டத்தைக் கொண்டு திகழ்கிறது. மலேசியாவிலும் கூட இந்நாவலுக்கு வாசகர்கள் காணப்படுகின்றனர் என்றும் அறிவாரியம் தெரிவித்துள்ளது. மேலும் விழா நடத்த முடியாத சூழல் நிகழ்வதால் விருது தொகையான 7 லட்சம் ரூபாய் ஆசிரியருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|