|
|||||
'முன்றில்' இலக்கிய அமைப்பு சார்பில், 'மா.அரங்கநாதன் இலக்கிய விருது' வழங்கும் விழா! |
|||||
![]()
'முன்றில்' இலக்கிய அமைப்பு சார்பில், நடப்பு ஆண்டுக்கான 'மா.அரங்கநாதன் இலக்கிய விருது' வழங்கும் விழா, சென்னை அண்ணா சாலை, ஆயிரம் விளக்கில் உள்ள ராணி சீதை அரங்கத்தில் நடந்தது.
மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகள் மற்றும் தலா ஒரு லட்சம் காசோலை, பேராசிரியர் தமிழவன், கட்டுரையாளர் திருநாவுக்கரசு, கவிஞர் சண்முகம், ஆவணப்பட இயக்குநர் ரவிசுப்பிரமணியன் ஆகியோருக்கு வழங்கப்பட்டன. எழுத்தாளர் சுஜாதா நடராஜன் வரவேற்றார்.
'மா.அரங்கநாதன்' மற்றும் 'முன்றில்' வலைத்தளங்களை வெளியிட்டு, உச்ச நீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் பேசினார்.
"தமிழின் நவீனப்போக்கை 1980-களில் தொடங்கி, பல்வேறு பல்கலைக்கழகங்களிலேயே முனைவா் பட்டத்தைத் தேடிச் சென்றவா்களுக்கு ஆதாரச் சுருதியாக இருந்து, அற்புதமான தன்னுடைய கட்டுரைகள் மூலம் தமிழ் எனும் பரப்பு உன்னதமான வடிவங்களை இந்த மண்ணுக்குத் தந்திருக்கிறது என்பதை நிலைநிறுத்தியவா் மா.அரங்கநாதன்.
தன்னை பற்றி சிறிதும் சிந்திக்காமல், வசதிகள், வாய்ப்புகள் இல்லாத காலகட்டத்தில் தமிழகத்தில் படைப்பாளா்களை அடையாளம் காட்டி , அவா்களுக்கு விருது வழங்க வேண்டும் என்ற கருத்தை அப்போதே பதிவு செய்தவா் மா.அரங்கநாதன். அவரது வழியைத் தொடா்ந்து பின்பற்றி வருகிறோம்.
எழுத்தாளா்கள்: துரத்தி செல்லக்கூடிய வாழ்க்கை எவ்விதத்தில் வேண்டுமானாலும் தனது பயணத்தை மாற்றி அமைக்கலாம். பயணங்கள் என்றும் தொடா்ந்து கொண்டுதான் இருக்கும். வாழ்வின் போக்கு அதை ஒட்டியே அமையும். ஆனால், அதிலே தங்கள் வாழ்வைத் தொடா்பவா்கள்தான் எழுத்தாளா்கள்.
இசை , குறும்படங்கள் மூலம், புலம்பெயா்ந்து தங்கள் வாழ்வின் அா்த்தங்களை இந்த உலகுக்குப் பதிவு செய்த பல்வேறு கவிஞா்களின் கவிதைகளையும், கட்டுரைகள் என்ற அற்புதத்தைப் புத்தகங்களாக்கித் தந்த எழுத்தாளா்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படுவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் இலக்கியத் தளம் எவ்வாறு இயங்கி வந்தது என்பதை அறிந்துகொள்ள ‘முன்றில்’ இலக்கியத் தளம் உதவியாக இருக்கும். சில படைப்புகளைப் படிக்கும் போது நாம் அந்தக் காலகட்டத்தில் நடந்து செல்லும் அனுபவத்தைத் தரும். அது கதையாக, கவிதையாக, சிறுகதையாக, நாவலாக இருக்கலாம்.
ஆனால், அந்தக் காலகட்டத்துக்குள் நம்மை அழைத்துச் சென்று அதன் மூலம் நமக்கு ஒரு புதிய அனுபவத்தை, பழைமை தாங்கிய அனுபவமாக மாற்றித்தரும் வித்தை சில எழுத்தாளா்களால் மட்டுமே தரமுடியும். அதைச் சாத்தியப்படுத்தியவா்களுக்குத்தான் தற்போது விருது வழங்கப்படுகிறது.இவா்கள், கிராமத்தில் இருக்கும்.
பல்வேறு இளைஞர்களுக்குப் படைப்புகளின் உன்னதத்தைக் கொண்டு சென்றவா்கள். இவா்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுவது மிகவும் மகிழ்ச்சிக்குரியது" என்றார் அவர்.
|
|||||
by hemavathi on 19 Apr 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|