LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

'முன்றில்' இலக்கிய அமைப்பு சார்பில், 'மா.அரங்கநாதன் இலக்கிய விருது' வழங்கும் விழா!

 

'முன்றில்' இலக்கிய அமைப்பு சார்பில், நடப்பு ஆண்டுக்கான 'மா.அரங்கநாதன் இலக்கிய விருது' வழங்கும் விழா, சென்னை அண்ணா சாலை, ஆயிரம் விளக்கில் உள்ள ராணி சீதை அரங்கத்தில்  நடந்தது. 

மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகள் மற்றும் தலா ஒரு லட்சம் காசோலை, பேராசிரியர் தமிழவன், கட்டுரையாளர் திருநாவுக்கரசு, கவிஞர் சண்முகம், ஆவணப்பட இயக்குநர் ரவிசுப்பிரமணியன் ஆகியோருக்கு வழங்கப்பட்டன. எழுத்தாளர் சுஜாதா நடராஜன் வரவேற்றார்.

 'மா.அரங்கநாதன்' மற்றும் 'முன்றில்' வலைத்தளங்களை வெளியிட்டு, உச்ச நீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் பேசினார். 

"தமிழின் நவீனப்போக்கை 1980-களில் தொடங்கி, பல்வேறு பல்கலைக்கழகங்களிலேயே முனைவா் பட்டத்தைத் தேடிச் சென்றவா்களுக்கு ஆதாரச் சுருதியாக இருந்து, அற்புதமான தன்னுடைய கட்டுரைகள் மூலம் தமிழ் எனும் பரப்பு உன்னதமான வடிவங்களை இந்த மண்ணுக்குத் தந்திருக்கிறது என்பதை நிலைநிறுத்தியவா் மா.அரங்கநாதன்.
தன்னை பற்றி சிறிதும் சிந்திக்காமல், வசதிகள், வாய்ப்புகள் இல்லாத காலகட்டத்தில் தமிழகத்தில் படைப்பாளா்களை அடையாளம் காட்டி , அவா்களுக்கு விருது வழங்க வேண்டும் என்ற கருத்தை அப்போதே பதிவு செய்தவா் மா.அரங்கநாதன். அவரது வழியைத் தொடா்ந்து பின்பற்றி வருகிறோம்.

எழுத்தாளா்கள்: துரத்தி செல்லக்கூடிய வாழ்க்கை எவ்விதத்தில் வேண்டுமானாலும் தனது பயணத்தை மாற்றி அமைக்கலாம். பயணங்கள் என்றும் தொடா்ந்து கொண்டுதான் இருக்கும். வாழ்வின் போக்கு அதை ஒட்டியே அமையும். ஆனால், அதிலே தங்கள் வாழ்வைத் தொடா்பவா்கள்தான் எழுத்தாளா்கள்.

இசை , குறும்படங்கள் மூலம், புலம்பெயா்ந்து தங்கள் வாழ்வின் அா்த்தங்களை இந்த உலகுக்குப் பதிவு செய்த பல்வேறு கவிஞா்களின் கவிதைகளையும், கட்டுரைகள் என்ற அற்புதத்தைப் புத்தகங்களாக்கித் தந்த எழுத்தாளா்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படுவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் இலக்கியத் தளம் எவ்வாறு இயங்கி வந்தது என்பதை அறிந்துகொள்ள ‘முன்றில்’ இலக்கியத் தளம் உதவியாக இருக்கும். சில படைப்புகளைப் படிக்கும் போது நாம் அந்தக் காலகட்டத்தில் நடந்து செல்லும் அனுபவத்தைத் தரும். அது கதையாக, கவிதையாக, சிறுகதையாக, நாவலாக இருக்கலாம்.

ஆனால், அந்தக் காலகட்டத்துக்குள் நம்மை அழைத்துச் சென்று அதன் மூலம் நமக்கு ஒரு புதிய அனுபவத்தை, பழைமை தாங்கிய அனுபவமாக மாற்றித்தரும் வித்தை சில எழுத்தாளா்களால் மட்டுமே தரமுடியும். அதைச் சாத்தியப்படுத்தியவா்களுக்குத்தான் தற்போது விருது வழங்கப்படுகிறது.இவா்கள், கிராமத்தில் இருக்கும்.

பல்வேறு இளைஞர்களுக்குப் படைப்புகளின் உன்னதத்தைக் கொண்டு சென்றவா்கள். இவா்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுவது மிகவும் மகிழ்ச்சிக்குரியது" என்றார் அவர்.

 

 

by hemavathi   on 19 Apr 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னையில் ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு வருகின்றன மின்சாரப் பேருந்துகள்! சென்னையில் ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு வருகின்றன மின்சாரப் பேருந்துகள்!
12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு  முடிவுகள்- அரியலூர் மாவட்டம் முதலிடம் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள்- அரியலூர் மாவட்டம் முதலிடம்
100 நாள் வேலைத் திட்டத்துக்கான தினசரி ஊதியம் ரூ.336 ஆக உயர்வு 100 நாள் வேலைத் திட்டத்துக்கான தினசரி ஊதியம் ரூ.336 ஆக உயர்வு
தமிழக அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக் கால முன்பணம் ரூ.20 ஆயிரமாக உயர்வு தமிழக அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக் கால முன்பணம் ரூ.20 ஆயிரமாக உயர்வு
குடிமைப்பணித் தேர்வில் தமிழக இளைஞர்கள் சாதனை!-நம்பிக்கையூட்டும் நான் முதல்வன் திட்டம்! குடிமைப்பணித் தேர்வில் தமிழக இளைஞர்கள் சாதனை!-நம்பிக்கையூட்டும் நான் முதல்வன் திட்டம்!
இனி கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை - வருகிறது புதிய சட்டம் இனி கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை - வருகிறது புதிய சட்டம்
பள்ளிக்கரணை நீர்ப்பிடிப்புப் பகுதிக்குள் காணாமல் போன 165 நீர்நிலைகள் பள்ளிக்கரணை நீர்ப்பிடிப்புப் பகுதிக்குள் காணாமல் போன 165 நீர்நிலைகள்
தமிழ் வார விழா - குரல் கொடுத்த அமைப்புகளுக்கு நன்றி! தமிழ் வார விழா - குரல் கொடுத்த அமைப்புகளுக்கு நன்றி!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.