|
|||||
திருமணத்தை இனி இணையதளத்திலேயே பதிவு செய்யலாம்! |
|||||
தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் செல்லாமல் திருமணத்தைப் பதிவு செய்யும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில், பத்திரப்பதிவு அலுவலகங்களில் திருமணங்களைப் பதிவு செய்யும் நடைமுறை உள்ளது. அதற்காகத் தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டம் 2009-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் நடைபெறும் திருமணங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது, திருமணம் நடைபெறும் பகுதியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே திருமணத்தைப் பதிவு செய்ய முடியும்.
பின்னர் 2020-ம் ஆண்டு இந்தச் சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் ஒன்று கொண்டு வந்தது. அதன்படி மணமகன் அல்லது மணமகள் வசிக்கும் பகுதியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் கூட திருமணங்களைப் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
திருமணப் பதிவுக்கு ரூ.300 கட்டணம் என்ற நிலையில் சில இடங்களில் ரூ.5,000 வரை கேட்பதாகப் புகார் எழுந்துள்ளது. நடைமுறைச் சிக்கல்களைக் களையத் திருமணப் பதிவு முறையை எளிதாக்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இணையதளம் அல்லது கைப்பேசி வாயிலாகத் திருமணப் பதிவைச் செய்து கொள்ள விரைவில் வழிவகை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. முதற்கட்டமாகத் தமிழ்நாடு திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்பவர்களுக்குப் பொருந்தும் எனவும், பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் சிறப்புத் திருமணங்கள் போன்றவற்றில் ஏற்கனவே உள்ள நடைமுறைகள் இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இவை செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
|
|||||
by on 03 Jan 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|