LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

கர்நாடகாவில் அனைத்துப் பொருள்களிலும் கன்னட மொழியில் பெயர் கட்டாயம் - முதல்வர் சித்தராமையா

 

கர்நாடகாவில் தயாரித்து விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான பொருட்களிலும் கன்னட மொழியில் அதன் பெயர் கட்டாயம் இடம்பெற வேண்டும் என முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.


இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசினார்.  "என் தலைமையிலான அரசு கன்னட மொழி, நீர், நிலம் ஆகியவற்றில் எந்தச் சமரசமும் செய்து கொள்ளாது. நான் பதவியேற்றதில் இருந்தே கன்னட மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறேன். கன்னடர்களுக்கும், கன்னட மொழிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் எனது அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.


இந்நிலையில் மார்ச் 1-ம் தேதி முதல் கர்நாடகாவில் தனியார் சார்பில் தயாரித்து விற்பனை செய்யப்படும் அனைத்துப் பொருட்களின் அட்டைகளிலும் கன்னடத்தில் அதன் பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும்.

தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பொருட்கள், நுகர்வோர் பயன்படுத்தும் அன்றாடப் பொருட்கள் ஆகியவற்றில் கன்னட மொழி இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனைப் பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது..." என்று அவர் தெரிவித்தார். 

 

 

by hemavathi   on 02 Mar 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜி.எஸ்.டி வரி சீரமைப்பு - விலை குறையும், உயரும் பொருள்களின் பட்டியல் ஜி.எஸ்.டி வரி சீரமைப்பு - விலை குறையும், உயரும் பொருள்களின் பட்டியல்
இந்தியாவில் 10 ஆண்டுகளில்  குழந்தைகள் இறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்தது இந்தியாவில் 10 ஆண்டுகளில் குழந்தைகள் இறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்தது
இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தியாவில் சட்டப்பூர்வமாகத் தங்கிக்கொள்ள அனுமதி இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தியாவில் சட்டப்பூர்வமாகத் தங்கிக்கொள்ள அனுமதி
ஹைத​ரா​பாத், அமராவ​தி, சென்னை, பெங்​களூருவை இணைக்கும் புல்லட் ரயில்- சர்வே பணிகள் தொடக்கம் ஹைத​ரா​பாத், அமராவ​தி, சென்னை, பெங்​களூருவை இணைக்கும் புல்லட் ரயில்- சர்வே பணிகள் தொடக்கம்
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநராக உர்ஜித் பட்டேல் நியமனம் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநராக உர்ஜித் பட்டேல் நியமனம்
2 தமிழக ஆசிரியர்களுக்குத் தேசிய நல்லாசிரியர் விருது 2 தமிழக ஆசிரியர்களுக்குத் தேசிய நல்லாசிரியர் விருது
நதிநீர் இணைப்பும்.  உயரும் இந்தியப் பொருளாதாரமும் - நதிகளை இணைப்பதால் உள்ள லாப நட்ட கணக்கு! நதிநீர் இணைப்பும். உயரும் இந்தியப் பொருளாதாரமும் - நதிகளை இணைப்பதால் உள்ள லாப நட்ட கணக்கு!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.