பாரா ஒலிம்பிக் மதுரை மாணவி மிகப்பெரும் சாதனை
பிரேசிலில் நடைபெற்ற காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று சாதனை புரிந்துள்ளார் மதுரையைச் சேர்ந்த மாணவி. ஜெர்லின் அனிகா என்ற என்ற அந்த மாணவி மதுரை மாநகராட்சி அவ்வை பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிப்பவர். இறகு பந்து ஒற்றையர் பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு இரண்டு போட்டிகளிலும் தங்கப்பதக்கத்தினை வெற்றிகரமாக தட்டிச்சென்றுள்ளார். மேலும் அனிகா இந்திய அணியின் குழு இறகுப்பந்து போட்டியிலும் தங்கம் வென்றுள்ளார்.மூன்று தங்கப் பதக்கங்கள் பெற்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் அனிகா.
|