LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

அமெரிக்க அதிபர் மனைவிக்கு இந்தியப் பிரதமர் வழங்கிய மதிப்பு மிக்க பரிசு


அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2023ம் ஆண்டு ரூ. 17 லட்சம் மதிப்பு மிக்க வைரத்தைப் பரிசளித்துள்ளார். இது, வேறு எந்த ஒரு வெளிநாட்டுத் தலைவரும் அளித்த பரிசுகளைவிடவும் மதிப்புமிக்கது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.


அமெரிக்க அதிபர், அவரது மனைவி உள்பட முக்கிய தலைவர்கள் கடந்த 2023ம் ஆண்டு பெற்ற பரிசுப் பொருட்கள் குறித்த விவரங்களை அந்நாட்டு வெளியுறவுத்துறை  வெளியிட்டது. அதன்படி, கடந்த 2023-ல் பிரதமர் மோடியிடம் இருந்த ஜில் பைடன் பெற்ற பரிசுதான் அந்நாட்டுத் தலைவர்கள் பெற்ற பரிசுகளிலேயே விலை உயர்ந்தது என்பது தெரிய வந்துள்ளது. $ 20 ஆயிரம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 17,02,510) மதிப்பு மிக்க 7.5 கேரட் வைரத்தை மோடி, ஜில் பைடனுக்கு பரிசளித்துள்ளார்.


மோடிக்கு அடுத்ததாக, உக்ரைன் நாட்டின் தூதர், ஜில் பைடனுக்கு $14,063 மதிப்பு மிக்க உடைகளில் மாட்டிக்கொள்ளும் அலங்கார நகையை (brooch) பரிசளித்துள்ளார். இதேபோல், எகிப்து நாட்டின் அதிபரும் அவரது மனைவியும் ஜில் பைடனுக்கு $4,510 மதிப்புமிக்க பிரேஸ்லெட், ப்ரூச், புகைப்பட ஆல்பம் ஆகியவற்றைப் பரிசளித்துள்ளனர்.


ஜோ பைடனும் மதிப்புமிக்க பல்வேறு பரிசுகளைப் பெற்றுள்ளார். தென் கொரியாவின் அதிபராக இருந்த சுக் யோல் யூன் இடம் இருந்து $7,100 மதிப்புமிக்க போட்டோ ஆல்பம், மங்கோலியப் பிரதமரின் $3,495 மதிப்புமிக்க மங்கோலியப் போர் வீரர்களின் சிலை, புருனே மன்னரிடம் இருந்து $3,300 மதிப்புமிக்க வெள்ளி பவுல், இஸ்ரேல் பிரதமரிடம் இருந்து $3,160 மதிப்புள்ள வெள்ளித் தட்டு, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் இருந்து $2,400 மதிப்புமிக்க படத்தொகுப்பு உள்ளிட்ட பரிசுகளை ஜோ பைடன் பெற்றுள்ளார்.


$480-க்கும் அதிக மதிப்பு மிக்க பரிசுப் பொருட்களை வெளிநாட்டுத் தலைவர்களிடம் இருந்து பெறும்போது அதனை அரசுக்கு அறிவிக்க வேண்டும் என அமெரிக்கச் சட்டம் கூறுகிறது. அதன்படி, கிடைக்கப்பெற்ற தகவல்களை அந்நாட்டு வெளியுறவுத்துறை தற்போது வெளியிட்டுள்ளது. இத்தகைய மதிப்புமிக்க பரிசுப் பொருட்கள் தேசியக் காப்பகத்துக்கு மாற்றப்படும் அல்லது அதிகாரப்பூர்வமாகக் காட்சிப்படுத்தப்படும்.


பிரதமர் மோடி கொடுத்த 20,000 டாலர் மதிப்புள்ள வைரம், வெள்ளை மாளிகையின் கிழக்குப் பிரிவில் அதிகாரப்பூர்வப் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது

என்றும், ஜில் பைடனுக்கு வழங்கப்பட்ட பிற பரிசுகள் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

by hemavathi   on 05 Jan 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உலகை வியக்க வைக்கும் சவுதி அரேபியாவின் பாலைவனச் சொகுசு ரயில் உலகை வியக்க வைக்கும் சவுதி அரேபியாவின் பாலைவனச் சொகுசு ரயில்
அமெரிக்கக் கச்சா எண்ணெய்க்கு 10% , நிலக்கரிக்கு 15%  வரி -  சீனா  பதிலடி அமெரிக்கக் கச்சா எண்ணெய்க்கு 10% , நிலக்கரிக்கு 15% வரி - சீனா பதிலடி
வரும் 13-ம் தேதி அமெரிக்க அதிபர்  ட்ரம்ப்பை- இந்திய பிரதமர் மோடி சந்திப்பு வரும் 13-ம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை- இந்திய பிரதமர் மோடி சந்திப்பு
சவுதி அரேபியாவில் இந்தியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை உயர்வு சவுதி அரேபியாவில் இந்தியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை உயர்வு
கூடுதல் வரி விதிப்பு, கிரீண்ட்லேண்-பனாமா விவகாரம் - ட்ரம்ப் அறிவிப்பால் பதற்றமாகும் நாடுகள்! கூடுதல் வரி விதிப்பு, கிரீண்ட்லேண்-பனாமா விவகாரம் - ட்ரம்ப் அறிவிப்பால் பதற்றமாகும் நாடுகள்!
ஊழியர்களுக்கு 70 கோடி ஊக்கத்தொகை வழங்கிய சீன நிறுவனம் ஊழியர்களுக்கு 70 கோடி ஊக்கத்தொகை வழங்கிய சீன நிறுவனம்
அமெரிக்காவில் விசா காலம் முடிந்தபிறகும் தங்கியிருக்கும் 7000 இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் விசா காலம் முடிந்தபிறகும் தங்கியிருக்கும் 7000 இந்திய மாணவர்கள்
அமெரிக்க முன்னணி வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக இந்தியப் பெண் அமெரிக்க முன்னணி வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக இந்தியப் பெண்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.