LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

சிறு சேமிப்பு திட்டங்கள் அனைத்திற்கும் வட்டி விகிதம் குறைப்பு – நிதியமைச்சகம் அறிவிப்பு

சிறு சேமிப்பு திட்டங்கள் அனைத்திற்கும் வட்டி விகிதம் குறைப்பு நிதியமைச்சகம் அறிவிப்பு

    ஏப்ரல் 1ம் தேதி முதல் பல்வேறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் குறைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. வங்கி சேமிப்பு கணக்குகளின் தற்போதைய வட்டி விகிதம் 4 சதவீதமாக உள்ளது. இது 3.5 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. பொது வருங்கால வைப்பு நிதி எனப்படும் PPF  வட்டி 7.1 சதவீதத்திலிருந்து 6.4 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.

    ஓராண்டுக் கால வைப்புத் தொகைக்கான வட்டி 5.5 சதவீதத்திலிருந்து 4.4 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் 7.4 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கான திட்டங்களில் வட்டி காலாண்டிற்கு ஒரு முறை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதே போல் ஏப்ரல் 1ம் தேதி முதல் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்திற்கு 5.9 சதவீத வட்டியையும், சுகன்யா சமிர்தி யோஜனா திட்டத்திற்கு 6.9 சதவீத வட்டியும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிசான் விகாஸ் பத்ரா வட்டி விகிதம் 6.21 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

    அஞ்சலக சேமிப்பு வைப்புத் தொகைக்கான வட்டி விகிதம் 3.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் 1 முதல் 5 ஆண்டுகள் வரையிலான வைப்புத் தொகைக்கு 4.4-5.1 சதவீதமும், ஐந்து ஆண்டுகளுக்கான வைப்புத் தொகைக்கு வட்டி 5.8 சதவீதமாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓர் ஆண்டில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

 

 

 

 

 

 

 

by Lakshmi G   on 01 Apr 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.