தமிழ் அர்ச்சனைகள்
அருள்மிகு விநாயகர் போற்றி
திருச்சிற்றம்பலம் நட்சத்திரம்..................... நாள்சேர் பெயர்.............................பெயர்க்காக செய்யும் இவ்வருச்சனை சேர்ந்த துதியை ஐயனே ஏற்று அருள்க ! அருள்கவே !! ஓம் அத்தி முகனே போற்றி " அரியின் மருகா போற்றி " அருளாம் ஆழி போற்றி " அறுமுகன் துணைவா போற்றி " இடைமுடை வயிற்றோய் போற்றி " இண்டைச் சடையோய் போற்றி " உத்தமக் களிறே போற்றி " உமைதிரு மகனே போற்றி " உயிர்க்குயிராய் இருப்பாய் போற்றி " எண்குணச் செல்வா போற்றி 10 ஓம் எண்ணிய ஈவாய் போற்றி " எமையாள் பவனே போற்றி " எய்ப்பில் வைப்பே போற்றி " ஏழைபங் காளா போற்றி " ஐங்கர அமுதே போற்றி " ஐந்தொழில் புரிவோய் போற்றி " ஒப்பிலா மணியே போற்றி " ஒருகைக் கற்பகமே போற்றி " ஔ¢நிறை வௌ¢யே போற்றி " ஔ¢ர்முக இறைவா போற்றி 20 ஓம் ஒற்றை மருப்பா போற்றி " ஓமேனும் உருவே போற்றி " ஓங்காரப் பொருளே போற்றி " ஓதிய மறையே போற்றி " அ·காப் பொருளே போற்றி " கண்ணுள் மணியே போற்றி " கருணையங் கடலே போற்றி " கவளமா களியே போற்றி " கழியவரு பொருளே போற்றி 30 ஓம் கற்பகக் களிறே போற்றி " காராணப் பொருளே போற்றி " கீதக்கிண் கிணியாய் போற்றி " குடவயிற்று வரதா போற்றி " குணக் குன்றே போற்றி " கைம்மா முகனே போற்றி " கௌவைத் துணையே போற்றி " சக்தி தலைப்பிள்ளை போற்றி " சாய்மறைச் செவியாய் போற்றி " சித்தி விநாயகர் போற்றி 40 ஓம் சிந்தா மணியே போற்றி " சிவஞானச் செல்வா போற்றி " சிவானந்த ஔ¢யே போற்றி " சுருதி விளக்கே போற்றி " செல்வக் கணேசா போற்றி " செழுஞ் சுடரே போற்றி " சைவக் குருவே போற்றி " சொல்லும் பொருளே போற்றி " ஞானக் குன்றே போற்றி " தண்டைக் காலாய் போற்றி 50 ஓம் தத்துவப் பொருளே போற்றி " தமிழ்நுகர் செவியாய் போற்றி " தாமரைக் கரத்தாய் போற்றி " தாழ்தடக் கையனே போற்றி " தீங்குதீர்ப் பவனே போற்றி " தெய்வசிகா மணியே போற்றி " தொப்பை யப்பா போற்றி " தொளைபடு கரமலை போற்றி " நந்தா மணியே போற்றி " நந்தி மகனே போற்றி 60 ஓம் நம்பும் துணையே போற்றி " நான்மறை விநாயகா போற்றி " நீறணி பவனே போற்றி " நுகருமா ரமுதே போற்றி " நூறாப் பெயரோய் போற்றி " நெற்றிக் கண்ணாய் போற்றி " நொந்தவர்க் காவாய் போற்றி " பவளக் குன்றே போற்றி " பாரதம் தீட்டியோய் போற்றி " பிணிக்கு மருந்தே போற்றி 70
ஓம் பிரணவ ஔ¢யே போற்றி " புகர்முக வேழா போற்றி " பூங்கமலப் பாதனே போற்றி " பூமகள் மருகா போற்றி " பெற்றோர் மகிழ்வே போற்றி " பேரானந்த நிறைவே போற்றி " பொள்ளா மணியே போற்றி " பொன்றாக் குன்றே போற்றி " மகா கணபதி போற்றி " மங்கள மூர்த்தி போற்றி 80 ஓம் மணி விளக்கே போற்றி " மததாரைக் கடவுளே போற்றி " மதியளிப் பவனே போற்றி " மதோற் கடனே போற்றி " மழஇளம் கன்றே போற்றி " மறை முதலெ போற்றி " மாங்கனி பெற்றாய் போற்றி " மாதவக் குன்றே போற்றி " முக்கட் கணபதி போற்றி " முதல்வரு பொருளே போற்றி 90 ஓம் மும்மத வாரியே போற்றி " மூல முதல்வா போற்றி " மூவரின் முதலாய் போற்றி " மூவேறு உருவே போற்றி " மேலாம் பதமே போற்றி " மொழிவார்க் கருளே போற்றி " மோதகச் செங் கையனே போற்றி " மௌலி தரித்தோய் போற்றி " யானைதிறை கொண்டாய் போற்றி " வல்லபை கணவா போற்றி 100 ஓம் விக்கின விநாயகா போற்றி " வித்தைக் கிறைவா போற்றி " வெண்தந் தத்தவா போற்றி " வேட்கை தணிவிப்பாய் போற்றி " வேத கணபதி போற்றி " வேதச் சுடரே போற்றி " வினைவேர் அறுப்பாய் போற்றி " விநாயகா போற்றி போற்றி 108
அருள்மிகு முருகப் பெருமான் போற்றி
திருச்சிற்றம்பலம் (நட்சத்திரம்)...................நாள்சேர் (பெயர்) ..........................பெயர்க்காக செய்யும் இவ்வருச்சனை சேர்ந்த துதியை ஐயனே ஏற்று அருள்க ! அருள்கவே !! ஓம் அடியவர்க் கஞ்சல் அளிப்பாய் போற்றி " அருணகிரிக்கு அருள் அப்பா போற்றி " அருளொளிப் பிழம்பாம் அன்பே போற்றி " அருவமும் உருவமும் ஆனாய் போற்றி " அறமுதல் நான்கும் அருள்வாய் போற்றி " அறிவுக்கு அறிவாய் அமர்வாய் போற்றி " ஆசைத் தளையை அறுப்பாய் போற்றி " ஆடும் பரிவேல் அரசே போற்றி " ஆண்டியின் வேடம் பூண்டாய் போற்றி 10 ஓம் ஆதியும் அந்தமும் இல்லாய் போற்றி " ஆரா அமுத வாரியே போற்றி " ஆறு சமயமும் ஆனாய் போற்றி " ஆறு முகத்தெம் அப்பா போற்றி " ஆவினன் குடிவாழ் அமுதே போற்றி " இடர்களைந் தின்பம் அருள்வாய் போற்றி " இம்மையில் மறுவை ஈவாய் போற்றி " இருநிலங் கோயிலா ஏற்றாய் போற்றி " இன்பே உருவாம் எந்தாய் போற்றி " ஈர்த்தெனை ஆண்ட இறைவா போற்றி 20 ஓம் உலகா இன்பம் தருவாய் போற்றி " உள்குவார் உள்ளத்து உணர்வே போற்றி " உள்ளங் கவரும் கள்வா போற்றி " ஊனம் எல்லாம் ஒழிப்பாய் போற்றி " எண்ணில் நாமம் ஏற்றாய் போற்றி " எய்ப்பினில் வைப்பாம் எந்தாய் போற்றி " எல்லா உயிர்க்கும் நல்லாய் போற்றி " ஏழு பிறப்பும் எனை ஆள்வாய் போற்றி " எந் நாட் டவர்க்கும் இறைவா போற்றி 30 ஓம் ஏரகத் துறையும் எந்தாய் போற்றி " ஏழை பங்காளா ஏற்பாய் போற்றி " ஐம்புலன் அடக்கம் அருள்வாய் போற்றி " ஒப்பிலா மணியே ஔ¢யே போற்றி " ஒன்றும் பலவும் ஆனாய் போற்றி " ஓங்கா ரத்துள் ஔ¢யே போற்றி " ஓரெழுத்து ஆறெழுத் தானாய் போற்றி " கண்ணிற் கருமா மணியே போற்றி " கதிர்காமத்து உறை கந்தா போற்றி " கருணையங் கடலே காவாய் போற்றி 40 ஓம் கருவினில் உயிரைக் கலந்தாய் போற்றி " கலங்கரை விளக்காய்க் காப்பாய் போற்றி " கலியுக வரதக் கடவுள் போற்றி " கல்நார் உரித்த என் மன்னா போற்றி " கள்ளப் புலனைக் களைவாய் போற்றி " கற்பனைகடந்த கதிரே போற்றி " கற்றவர் விழுங்குங் கனியே போற்றி " காக்காக் கடவிய காவல போற்றி " காவில உடையணி கடவுள் போற்றி " குகைவாழ் குகனே குமரா போற்றி 50 ஓம் குருவாய் வருவாய் அருள்வாய் போற்றி " குறைவிலா நிறைவாம் குணமே போற்றி " குன்றுதோ றாடும் குழந்தாய் போற்றி " கைவேல் கொண்ட காவல் போற்றி " சமரா புரிவாழ் சாமியே போற்றி " சிவகுரு நாதச் செல்வா போற்றி " சின்மயா னந்த சிவமே போற்றி " சுத்தசன் மார்க்கத் துணையே போற்றி " சும்மா இருஎனச் சொன்னாய் போற்றி " செந்தமிழ்ப் பாட்டின் சிறப்பே போற்றி 60 ஓம் செந்திலில் வாழும் சேயே போற்றி " சேவலங் கொடிச் செம்மலே போற்றி " ஞானதண் டாயுத பாணீ போற்றி " தணிகை மலையுறை தலைவா போற்றி " தண்தமிழ்ப் புலமை தருவாய் போற்றி " திசைமுகம் விளக்கும் தேவே போற்றி " திருப்பரங் குன்றத் திருவே போற்றி " திருவடி ஞானம் சேர்ப்பாய் போற்றி " தீரா நோய்கள் தீர்ப்பாய் போற்றி 70 ஓம் துதிப்பார் துன்பம் துடைப்பாய் போற்றி " துறந்தோர் உள்ளத் தூமணி போற்றி " தூண்டா விளக்கின் சுடரே போற்றி " தெய்வமா மயிலோய் சேவடி போற்றி " தெவிட்டா இன்பத் தேனே போற்றி " தேவர்கள் சேனா பதியே போற்றி " தேனினும் இனிய சுவையே போற்றி " தோன்றாத் துணையாய் வருவாய் போற்றி " நக்கீரர் தமிழ் நயந்தாய் போற்றி " நம்புவோர்க் கின்பம் நல்குவாய் போற்றி 80 ஓம் நாடுவோர் நாவில் இருப்பாய் போற்றி " நானெனும் நெஞ்சில் நசித்தாய் போற்றி " நினைப்பவர் அகந்தை நிற்பாய் போற்றி " நீக்கமற நின்ற நிறைவே போற்றி " நேயத்தே நின்ற நிமலா போற்றி " பக்தி வலையிற் படுவாய் போற்றி " பதிபசு பாசம் பகர்ந்தாய் போற்றி " பவப்பிணி மருந்தாம் பரமா போற்றி " பழமுதிர சோலைப் பரனே போற்றி " பழநிப் பதிவாழ் பாலா போற்றி 90 ஓம் பாட்குக் குருகும் பதியே போற்றி " பிரணவம் மொழிந்த பிள்ளாய் போற்றி " பிறவா இறவாப் பெம்மான் போற்றி " பிறவி அறுக்கும் பிரானே போற்றி " புகழும் போகமும் புணர்ப்பாய் போற்றி " மணங்கமழ் தெய்வத்து இளநலம் போற்றி " மம்மர் அறுக்கும் மருந்தே போற்றி " மருவே மலரே மணியே போற்றி 100 ஓம் மலர்மிசை ஏகியா மாண்பே போற்றி " முத்தமிழ் முழுமுதற் பொருளே போற்றி " வரம்பல வழங்கும் வள்ளால் போற்றி " வள்ளலார் போற்றும் வாழ்வே போற்றி " வீட்டினைக் காட்டும் விளக்கே போற்றி " வேண்டுநர் வேண்டிய தருள்வாய் போற்றி " அருளும் பொருளும் அளிப்பாய் போற்றி " முருகா முருகா முருகா போற்றி 108 திருச்சிற்றம்பலம்
அருள்மிகு சிவபெருமான் போற்றி
திருச்சிற்றம்பலம் (நட்சத்திரம்) ............................ நாள்சேர் (பெயர்)...................................பெயர்க்காக செய்யும் இவ்வருச்சனை சேர்ந்த துதியை ஐயனே ஏற்று அருள்க ! அருள்கவே !! ஓம் கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி " கழல் அடைந்தார் செல்லுங் கதியே போற்றி " அற்றவர்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி " அல்லலறுத்து அடியேனை ஆண்டாய் போற்றி " மற்றொருவர் ஒப்பில்லா மைந்தா போற்றி " வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி " செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி " திருமூலட் டானனே போற்றி போற்றி 1(9) ஓம் வங்கமலி கடல்நஞ்சம் உண்டாய் போற்றி " மதயானை ஈர்உரிவை போர்த்தாய் போற்றி " கொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி " கொல்புலித்தோல் ஆடைக் குழகா போற்றி " அங்கணணே அமரர்கள்தம் இறைவா போற்றி " ஆலமர நீழல்அறஞ் சொன்னாய் போற்றி " செங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றி " திருமூலட் டானனே போற்றி போற்றி 2(18) ஓம் மலையான் மடந்தை மணாளா போற்றி " மழவிடையாய் என்நெஞ்சில் நின்றாய் போற்றி " நெற்றிமேல் ஒற்றைக்கண் உடையாய் போற்றி " இலையார்ந்த மூவிலைவேல் ஏந்தீ போற்றி " ஏழ்கடலும் ஏழ்பொழிலும் ஆனாய் போற்றி " சிலையால் அன்று எயில்எரித்த சிவனே போற்றி " திருமூலட் டானனே போற்றி போற்றி 3 (28) ஓம் பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி " பூதப் படையுடையாய் போற்றி போற்றி " மன்னியசீர் மறைநான்கும் ஆனாய் போற்றி " மறயேந்து கையானே போற்றி போற்றி " உன்னும் அவர்க்கு உண்மையனே போற்றி போற்றி " உலகுக்கு ஓருவனே போற்றி போற்றி " சென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி " திருமூலட் டானனே போற்றி போற்றி 4 (43) ஓம் நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி " நற்றவனே நின்பாதம் போற்றி போற்றி " வெஞ்சுடரோன் பல்இறுத்த வேந்தே போற்றி " வெண்மதியங் கண்ணி விகிர்தா போற்றி " துஞ்சிருளில் ஆடல் உகந்தாய் போற்றி " தூநீறு மெய்க்கணிந்த சோதீ போற்றி " செஞ்சடையாய் நின்பாதம் போற்றி போற்றி " திருமூலட் டானனே போற்றி போற்றி 5 (55) ஓம் சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி " சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி " பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி " புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி " அங்கமலத்து அயனோடு மாலும் காணா போற்றி " அனல்உருவா நின்பாதம் போற்றி போற்றி " செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி " திருமூலட் டானனே போற்றி போற்றி 6(69) ஓம் வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி " வான்பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றி " கொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி " குரைகழலால் கூற்றுதைத்த கோவே போற்றி " நம்புவர்க்கு அரும்பொருளே போற்றி " நால்வேதம் ஆறங்கம் ஆனாய் போற்றி " செம்பொனே மரகதமே மணியே போற்றி " திருமூலட் டானனே போற்றி போற்றி 7 (79) ஓம் உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி " உகப்பாய் மனத்தென்றும் நீங்காய் போற்றி " வள்ளலே போற்றி மணாளா போற்றி " வானவர்கோன் தோள்துணித்த மைந்தா போற்றி " மேலோர்க்கு மேலோர்க்கும் மேலாய் போற்றி " தெள்ளுநீர்க் கங்கைச் சடையாய் போற்றி " திருமூலட் டானனே போற்றி போற்றி 8 (89) ஓம் பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி " புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி " தேவார்ந்த தேவர்க்கும் தேவே போற்றி " திருமாலுக்கு ஆழி அளித்தாய் போற்றி " சாவாவே காத்தென்னை ஆண்டாய் போற்றி " சங்கொத்த நீற்றெம் சதுரா போற்றி " சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி " திருமூலட் டானனே போற்றி போற்றி 9 (99) ஓம் பிரமன்தன் சிரம் அரிந்த பெரியோய் போற்றி " பெண்உருவோடு ஆணுருவாய் நின்றாய் போற்றி " கரநான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி " காதலிப்பார்க்கு ஆற்ற எளியாய் போற்றி " அருமந்த தேவர்க்கு அரசே போற்றி " சிரம்நெரித்த சேவடியாய் போற்றி போற்றி " திருமூலட் டானனே போற்றி போற்றி 10 (108) திருச்சிற்றம்பலம்
அருள்மிகு உமையம்மை போற்றி
திருச்சிற்றம்பலம் (நட்சத்திரம்)........................நாள்சேர் (பெயர்)...................பெயர்க்காக செய்யும் இவ்வருச்சனை சேர்ந்த துதியை அம்மையே ஏற்று அருள்க! அருள்கவே !! ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி " அகிலாண்ட நாயகியே போற்றி " அருமறையின் வரம்பே போற்றி " அறம்வளர்க்கும் அம்மையே போற்றி " அரசிளங் குமரியே போற்றி " அப்பர் பிணிமருந்தே போற்றி " அமுத நாயகியே போற்றி " அருந்தவ நாயகியே போற்றி " அருள்நிறை அம்மையே போற்றி " ஆலவாய்க் கரசியே போற்றி 10 ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி " ஆதியின் பாதியே போற்றி " ஆலால சுந்தரியே போற்றி " ஆனந்த வல்லியே போற்றி " இளவஞ்சிக் கொடியே போற்றி " இமயத் தரசியே போற்றி " இடபத்தோன் துணையே போற்றி " ஈசு வரியே போற்றி " உயிர் ஓவியமே போற்றி " உலகம் மையே போற்றி 20 ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி " எண்திசையும் வென்றோய் போற்றி " ஏகன் துணையே போற்றி " ஐங்கரன் அன்னையே போற்றி " ஐயந் தீரப்பாய் போற்றி " ஒப்பிலா அமுதே போற்றி " ஓங்கார சுந்தரியே போற்றி " கற்றோர்க் கினியோய் போற்றி " கல்லார்க்கும் எளியோய் போற்றி " கடம்பவன சுந்தரியே போற்றி 30 ஓம் கலியாண சுந்தரியே போற்றி " கனகமணிக் குன்றே போற்றி " கற்பின் அரசியே போற்றி " கருணை யூற்றே போற்றி " கல்விக்கு வித்தே போற்றி " கதிரொளிச் சுடரே போற்றி " கற்பனை கடந்த கற்பகமே போற்றி " காட்சிக்கு இனியோய் போற்றி " காலம் வென்ற கற்பகமே போற்றி 40 ஓம் கிளியேந்திய கரத்தோய் போற்றி " குலச்சிறை காத்தோய் போற்றி " குற்றம்பொறுக்கும் குணமே போற்றி " கூடற்கலாப மயிலே போற்றி " கோலப் பசுங்கிளியே போற்றி " சம்பந்தன் ஞானத்தாயே போற்றி " சக்தி வடிவே போற்றி " சங்கம் வளர்த்தாய் போற்றி " சிவகாம சுந்தரியே போற்றி " சித்தந் தௌ¢விப்பாய் போற்றி 50 ஓம் சிவயோக நாயகியே போற்றி " சிவானந்த வல்லியே போற்றி " சிங்கார வல்லியே போற்றி " செந்தமிழ்த் தாயே போற்றி " செல்வத்துக் கரசியே போற்றி " சேனைத் தலைவியே போற்றி " சொக்கர் நாயகியே போற்றி " சைவநெறிநிலைக்கச் செய்தோய் போற்றி " ஞானம் பிகையே போற்றி " ஞானப் பூங்கோதையே போற்றி 60 ஓம் தமிழர்குலச் சுடரே போற்றி " தண்டமிழ்த் தாயே போற்றி " திருவுடை யம்மையே போற்றி " திசையெலாம் புரந்தாய் போற்றி " திரிபுர சுந்தரியே போற்றி " திருநிலை நாயகியே போற்றி " தெவிட்டாத தெள்ளமுதே போற்றி " தென்னவர் செல்வியே போற்றி " தேன்மொழி யம்மையே போற்றி 70 ஓம் தையல் நாயகியே போற்றி " நற்கனியின் சுவையே போற்றி " நற்றவத்தின் கொழுந்தே போற்றி " நல்ல நாயகியே போற்றி " நீலாம் பிகையே போற்றி " நீதிக்கு அரசியே போற்றி " பக்தர்தம் திலகமே போற்றி " பழமறையின் குருந்தே போற்றி " பரமானந்தப் பெருக்கே போற்றி " பண்ணமைந்த சொல்லே போற்றி 80 ஓம் பவளவாய்க் கிளியே போற்றி " பல்லுயிரின் தாயே போற்றி " பசுபதி நாயகியே போற்றி " பாகம்பிரியா அம்மையே போற்றி " பாண்டிமா தேவியின் தேவே போற்றி " பார்வதி அம்மையே போற்றி " பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி " பெரிய நாயகியே போற்றி " பொன்மயி லம்மையே போற்றி " பொற்கொடி அன்னையே போற்றி 90 ஓம் மலயத்துவசன் மகனே போற்றி " மங்கல நாயகியே போற்றி " மழலைக் கிளியே போற்றி " மனோன்மணித் தாயே போற்றி " மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி " மாயோன் தங்கையே போற்றி " மாணிக்க வல்லியே போற்றி " மீனவர்கோன் மகளே போற்றி " மீனாட்சி யம்மையே போற்றி " முழுஞானப் பெருக்கே போற்றி 100 ஓம் முக்கண்சுடர் விருந்தே போற்றி " யாழ்மொழி யம்மையே போற்றி " வடிவழ கம்மையே போற்றி " வேலனுக்கு வேல்தந்தாய் போற்றி " வேத நாயகியே போற்றி " வையகம் வாழ்விப்பாய் போற்றி " அம்மையே அம்பிகையே போற்றி போற்றி " அங்கயற்கண் அம்மையே போற்றி போற்றி 108 திருச்சிற்றம்பலம்
|