LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் செய்திகள் (Thirukkural News )

மாநில அளவிலான திருக்குறள் போட்டிகள்... : லட்சங்களில் பரிசை அள்ளிய ஆசிரியர்கள்


குமரியில் வானுயர்ந்து நிற்கும் திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழாவைச் சிறப்புற நடத்தி வருகிறது தமிழக அரசு.  அதன் ஒரு பகுதியாகத் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், விருதுநகர் மாவட்ட நிர்வாக ஒருங்கிணைப்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினாப் போட்டி விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. அப்போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தொடங்கிவைத்தார்.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக இணை இயக்குநர் சங்கர சரவணன் அறிமுகவுரையாற்றினார். 'வள்ளுவர் குறள் குடும்பம்' இராஜேந்திரன் சிறப்புரையாற்றினார். மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினாப் போட்டியின் முதல்நிலை போட்டி தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் 21.12.2024 அன்று நடத்தப்பட்டதில், 6131 நபர்கள் கலந்துகொண்டனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் நான்கு குழுக்கள் என்ற அடிப்படையில் 12 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, 38 மாவட்டங்களிலிருந்தும் தேர்வு செய்யப்பட்ட 150 குழுவினர் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டனர்.

 மாநில அளவிலான திருக்குறள் வினாடி-வினா இறுதிப்போட்டியில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி பட்டதாரி ஆசிரியர்  பொ.கணேசன், கேத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சக்திவேல் மற்றும் கருவலூர் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி தமிழாசிரியர் ஆனந்த் குழுவினர் முதல் இடம் பிடித்தனர்.

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கொமத்தம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் அறிவொளி, எஸ்.அம்மாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்  வாசுகி, அரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் வன சுந்தரி ஆகியோர் 2-ம் பிடித்தனர். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சேரன்மகாதேவி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சொர்ணம், முனைஞ்சிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் சிராஜீநிஷா மற்றும் கூட்டப்புளி புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஜாய்ஸ் கர்சீலியாகுழு 3-ம் இடம் பிடித்தனர். முதல் இடம் பிடித்த குழுவிற்கு ரூ.2 லட்சம், இரண்டாம் இடம் பிடித்த குழுவிற்கு ரூ.1.5 லட்சம், 3-ம் இடம் பிடித்த குழுவிற்கு ரூ.1 லட்சம் பரிசு, பாராட்டுச் சான்றிதழை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வழங்கினார்.

தொடர்ந்து 4,5,6-ம் இடங்கள் பிடித்த குழுக்களுக்கும் தலா ரூ.25 ஆயிரம் என மொத்தம் 6 குழுக்களுக்கு ரூ.5.25 லட்சம் மதிப்பிலான பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும், பார்வையாளர்களுக்கான சிறப்புப் பரிசாக 3 பேருக்குத் தலா ரூ.2000 வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கூறும்போது, "திருக்குறள் தமிழர்களுக்கான பொதுவான ஒரு நூல். அது பள்ளி, கல்லூரித் தேர்வுகள், போட்டித் தேர்வுப் பாடத்திட்டங்களைத் தாண்டியும் தொடர்ச்சியாகப் படிப்பதற்கான வாய்ப்பைத் தரக்கூடியது. திருக்குறள் என்ற புரிதல் ஏற்பட வேண்டும் என்பதற்காகவும், அறிவுசார்ந்த தகவல்களைப் பொழுதுபோக்கான செயல்பாடுகள் மூலம் எடுத்துச் செல்வதற்காகவும் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன" எனத் தெரிவித்தார்.

by hemavathi   on 02 Jan 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழக முதல்வர் வெளியிட்ட குறள் சார்ந்த 6 சிறப்பு அறிவிப்புகள்! தமிழக முதல்வர் வெளியிட்ட குறள் சார்ந்த 6 சிறப்பு அறிவிப்புகள்!
வலைத்தமிழ் பதிப்பகத்தின் இரண்டாவது திருக்குறள் நூல் -கல்வியமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார் வலைத்தமிழ் பதிப்பகத்தின் இரண்டாவது திருக்குறள் நூல் -கல்வியமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்
திருக்குறள் உலகப்பரவலாக்களுக்குத் தேவையான மொழிபெயர்ப்புகள் குறித்த ஆய்வுப் பார்வை திருக்குறள் உலகப்பரவலாக்களுக்குத் தேவையான மொழிபெயர்ப்புகள் குறித்த ஆய்வுப் பார்வை
மதிப்பிற்குரிய தமிழ்ச்சங்க நிர்வாகிகளுக்கு, மதிப்பிற்குரிய தமிழ்ச்சங்க நிர்வாகிகளுக்கு,
பர்மீஸ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல்  நம் தொகுப்பில் சேர்க்கப்பட்டது. பர்மீஸ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல் நம் தொகுப்பில் சேர்க்கப்பட்டது.
பிரான்ஸ் முத்தமிழ்ச் சங்கத்தின் நிறுவனரும் , திருக்குறள் பிரெஞ்சு மொழிபெயர்ப்பின் தொகுப்பாசிரியருமான திரு.கோவிந்தசாமி செயராமன் நூலை வழங்கிறார் பிரான்ஸ் முத்தமிழ்ச் சங்கத்தின் நிறுவனரும் , திருக்குறள் பிரெஞ்சு மொழிபெயர்ப்பின் தொகுப்பாசிரியருமான திரு.கோவிந்தசாமி செயராமன் நூலை வழங்கிறார்
நன்னெறிக் கல்வியில் திருக்குறள் முற்றோதல் கற்றுத்தர அறிவுறுதியுள்ள பள்ளிக்கல்வித் துறைக்கு பாராட்டுகள்.. நன்னெறிக் கல்வியில் திருக்குறள் முற்றோதல் கற்றுத்தர அறிவுறுதியுள்ள பள்ளிக்கல்வித் துறைக்கு பாராட்டுகள்..
மதுரையின் புகழ்மிக்க தொழிலதிபர் காலேஜ் ஹவுஸ் நிறுவனர் ,திரு.கார்த்திகேயன்  அவர்களை  நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன் மதுரையின் புகழ்மிக்க தொழிலதிபர் காலேஜ் ஹவுஸ் நிறுவனர் ,திரு.கார்த்திகேயன் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.