‘டெட்’ சான்றிதழ் வாழ்நாள் நீட்டிப்பு கிடையாது – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
தமிழகத்தில் பொது நூலகங்கள் நேற்று திறக்கப்பட்டன. இதையடுத்து புதிய கல்விக் கொள்கையின் பாடத்திட்டங்களை ஆராய்வதற்கு ஆசிரியர்கள் ஆர்வம் காட்டினர். இந்நிலையில் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘கரோனா பாதிப்பைப் பொறுத்து பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் முடிவெடுப்பார். ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்களுக்கான வாழ்நாள் காலம் 7 ஆண்டுகள் தான். அந்த கால அவகாசம் முடிந்தபின் மீண்டும் அவர்கள் தகுதித் தேர்வை எழுத வேண்டும்.’ இவ்வாறு அவர் கூறினார்.
|