தமிழகத்தில் அகழாய்வு பணிகள் செப்டம்பரில் முடியும்
தமிழகத்தில் கீழடி, மணலூர், கொந்தகை, அகரம், கொடுமணல், ஆதிச்சநல்லூர், சிவகளை என 7 இ்டங்களில் அகழாய்வு பணி நடக்கிறது. இந்த இடங்களில் மொத்தம் 3,599 தொல் பொருட்கள் கிடைத்துள்ளன. அலுமினியம் கலந்த செங்கல் கட்டுமானங்கள், மெல் அலகு கத்திகள், வழவழப்பான கல் மழுக்கள், சிறிய தங்க நாணயங்கள், சீன மண்பாண்டத்தின் விளிம்பு பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. கற்களால் ஆன ஆயுதங்களைப் பார்க்கும் போது தமிழனின் வரலாறு 3லட்சத்து 75 ஆயிரம் ஆண்டுகளுக்கும் கூடுதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
|