இத்தாலியில் இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து
கன்னியாகுமரிப் பகுதியைச் சேர்ந்த தேவசகாயம் அவர்களுக்கு புனிதர் பட்டம் ரோம் கத்தோலிக்க திருச்சபையில் வழங்கப்பட்டது. அப்போது ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. தேவசகாயம் தமிழ்நாட்டின் முதல் புனிதர் ஆவார். இத்தாலியில் பாடப்பட்டுள்ள தமிழ்த்தாய் வாழ்த்து சமூக வலைதளங்களில் விரைவாக பகிரப்பட்டு பரவி வருகிறது.
|