எங்கும் தமிழ் முயற்சி! மதுரையில் தபால் சேகரிக்கும் பைகள் முதன் முறையாக தமிழில் அச்சடித்து வழங்கப்பட்டுள்ளன. ஒரு மொழி உயிரோடு இயங்குவதை அது எங்கும் எதிலும் பயன்படுவதன் மூலமே உறுதி செய்ய இயலும். மனிதரின் அடையாளத்தோடு பிணைந்தது மொழி. அதனை செழுமைப்படுத்திக் காப்பது அதைத் தாய் மொழியாகக் கொண்ட மக்கள் குழுவினுடைய கடமை.மதுரை அஞ்சல் பொருள் கூடத்தால் கொள்முதல் செய்யப்பட்டு 33 அஞ்சல் கூடங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தபால் பைகள் முதன் முறையாக தமிழில் அச்சடித்து வழங்கப்பட்டுள்ளன. இதற்கு முயற்சி எடுத்த மதுரை தலைமை அஞ்சலக அதிகாரிக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார், பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள்.
|