எந்த பாடதிட்டத்தில் படித்தாலும் இவ்வாண்டு 9ஆம் வகுப்பில் கட்டாயம் மாணவர்கள் தமிழ் படித்தாகவேண்டும். அடுத்த ஆண்டு 10ஆம் வகுப்பிற்கும் இது நடைமுறைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது . இது தற்சமயம் போடப்பட்ட ஆணை அல்ல, 2014ஆம் ஆண்டு முதன்மை செயலளராக சபிதா இருந்தபோது போடப்பட்ட ஆணை. 2006ஆம் ஆண்டு Tamil Nadu Tamil Learning Act, 2006 இயற்றப்பட்டது, அதன்படி ஒவ்வொரு ஆண்டாக பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக்கவேண்டும் என்றது அவ்வாணை.
ஆனால் இது 2014 முதலே நடைமுறைக்கு வந்தது. அதன்படியே இந்த ஆண்டு 2023-24 கல்வியாண்டில் அனைத்து (சிபிஎஸ் உட்பட) பள்ளியிலும் தமிழ் கட்டாய பாடமாக இருக்க வேண்டும். சில பள்ளிகள் ஏற்கனவே சுற்றறிக்கைமூலம் பெற்றோர்களுக்கு தெரிவித்துவிட்டனர். இதர பள்ளிகளும் விரைவில் சுற்றறிக்கைவிடும். பள்ளிக்கல்வித்துறை இதனை நினைவூட்டியதா தெரியவில்லை. https://cms.tn.gov.in/sites/default/files/go/sedu_e_145_2014.pdf?fbclid=IwAR1PD1cRe7am8EKrymfRhkrJjf7jcj5mDkRS-OcUpcJFtbA-HgeDkrP0EEA விலக்கு ஆணை - https://tnschools.gov.in/wp-content/uploads/2021/11/Tamil-Learning.pdf?fbclid=IwAR3XK5ivZiNChHE3StBUX2lS-kPxohouJh5YItZO-IimQfTLblrIvGa9hvw (இதில் மிக தெளிவாக விலக்கு எதுவரையில் என குறிப்பிடப்பட்டுள்ளது).
ஆகவே இந்த ஆண்டு 2023-24, 9ஆம் வகுப்பிற்கு தமிழ் கட்டாயம், அடுத்த ஆண்டு முதல் 2024-25 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் கட்டாயம்.
நன்றி:விழியன் (முகநூல் பதிவு)
|