பாடத்திட்டம் எதுவாக இருப்பினும் தமிழ் மொழிப் பாடம் அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயம், பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தினை பின்பற்றும் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் தமிழ் பாடம் கட்டாய மொழிப் பாடமாக உள்ளது.CBSE,ICSE போன்ற பாடத்திட்டங்களை பின்பற்றும் பள்ளிகளில் தமிழ் மொழிப் பாடம் கட்டாயம் இல்லை, தமிழ் மொழியை விருப்பப் பாடமாக மாணவர்கள் தேர்வு செய்யும் நிலை உள்ளது. இதனால் குழந்தைகள் தாய் மொழியை கற்காத மற்றும் அறியாத நிலையும் உள்ளது. தற்போது பள்ளிக் கல்வித்துறை தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் மொழிப் பாடம் கட்டாயம் என்று அறிவித்துள்ளது. இதனால் பாடத்திட்ட முறை எதுவாக இருப்பினும் அப்பள்ளியில் தமிழ் மொழிப் பாடம் கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும். தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் தமிழ் மொழி பாடத் தேர்வு மதிப்பெண்கள் அவர்களது மொத்த மதிப்பெண்ணில் சேர்த்து கணக்கிடப்படாது. அடுத்த ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு வரையிலும் அனைத்து குழந்தைகளும் தமிழ் மொழியினை பாடமாக கற்க வேண்டும். தமிழ் பாடமாக கற்பிக்கப்படுவதனை மாவட்டக் கல்வி அதிகாரிகள் கண்காணித்து உறுதிப்படுத்தவும் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
|