LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- மலேசியா

எழுமின் இரண்டாம் உலகத் தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர்கள் மாநாடு.

எழுமின் இரண்டாம் உலகத் தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர்கள் மாநாடு.

மே 03-05, சைபர் ஜெயா பல்கலைக் கழகம், கோலாலம்பூர், மலேசியா.

 

'எழுமின்'- The Rise என அறியப்பட்ட முதல் உலகத் தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர்கள் மாநாடு கடந்த 2018 டிசம்பர் 28, 29, 30 நாட்களில் மதுரை மாநகரில் வெற்றிகரமாக நடைபெற்றது. 17 நாடுகளிலிருந்து 500 தமிழ்த் தொழிலதிபர்கள் பங்கேற்றனர். தமிழ் நட்பின் தடங்கள் பற்றி, ஒத்துழைப்பின் பண்பாட்டை தகவமைக்க முயன்ற நம்பிக்கையின் புதியதொரு வாயில் திறப்பாக மாமதுரை மாநாடு அமைந்தது. முதல் மாநாடு நிறைவுற்ற நான்கு மாதங்களில் இதோ இரண்டாம் உலகத் தமிழ் தொழில் முனைவோர்- திறனாளர்கள் மாநாடு வரளர்கிறது. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நாட்டுக்கோட்டைத் நற்றமிழர் Tan Sri டத்தோ திரு. பலன் அவர்கள் உருவாக்கிய சைபர் ஜெயா பல்கலைக்கழகத்தில் - மே 3, 4, 5 நாட்களில்.

குடியுரிமையின்றித் தவித்த பல்லாயிரம் தமிழருக்காய் வாதாடி வென்ற எமது தோழமை அமைப்பான DHRRA Malaysia மற்றும் மலேசிய CTACIS அமைப்புகள் இம் மாநாட்டினை திரு. சரவணன் சின்னப்பன் அவர்கள் தலைமையில் கட்டமைக்கின்றன.

21-ம் நூற்றாண்டு, ஆசிய- பசிபிக் பிராந்திய நாடுகளுக்குரியது சீனா- இந்தியா- ஜப்பான்-சிங்கப்பூர், ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இதில் முக்கிய வகிபாகம் உண்டு. ஆனால் வியப்பூட்டும் தொழில் வணிக வாய்ப்புகள் மலரப்போவது இப்பிராந்தியத்தின் வியட்நாம், மயன்மார் என்ற பர்மா, இந்தோனேசியா, கம்போடியா, லாவோஸ் போன்ற நாடுகளில். இப்பிராந்தியத்துடன் தமிழரின் வணிகத் தொடர்புகள் ஈராயிரம் ஆண்டு கால வேரோட்டம் கொண்டவை. ஆதலால் ஜப்பான், சீனா, சிங்கப்பூர், வியட்நாம், மியான்மர், கம்போடியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட கிழக்கு, தென்கிழக்கு, தூரக் கிழக்கு மற்றும் பசிபிக் நாடுகளுக்கான நுழைவாயிலாகவும், உயர்மேட்டுக் களமாகவும் மலேசியாவைக் கருதுகிறோம். எனவே மே 3, 4, 5 நாட்களில் நடைபெறவுள்ள இரண்டாம் உலகத்தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர்கள் மாநாடு புவிசார் நோக்கில் மூலோபாய முக்கியத்துவம்( Geo Strategic importantance) கொண்டது. அந்நாடுகளில் தொழில் -வணிகம் செய்யும் தமிழர்கள் இம்மாநாட்டில் பங்கேற்கவிருப்பது தனிச்சிறப்பு.

The Rise- எழுமின் இயக்கம் எதற்காக?
1.தொழில்-வணிகத்தில், அறிவுத்துறைகளில், மூலதனச் சந்தையில் தமிழர்கள் வென்று உலகப்பரப்பில் மதிப்பிற்குரிய மக்களாய் எழவேண்டும்.

2. அடுத்த இருபது ஆண்டுகளில் தமிழகத்தில் பத்து லட்சம் சிறு-குறு- பெரிய தொழில்முனைவோரை வளர்த்தெடுக்கவேண்டும். அதன்மூலம் தமிழகத்தை 1ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வலுச்செய்யவேண்டும்.

இன்னும் இவ்வாறு, சில.

மாநாடுகளால் என்ன பயன்?

1. நாம் தனிப்பட்டும், தமிழச் சமூகமாகவும் வளர்வதற்கான வழித்தடம் புலப்படும்.

2. நம்பிக்கையான தொழில் நட்புறவுகள் வலுவாக உருவாகும்.

3. புதிய தொழில் யோசனைகள் கிட்டும்.
இன்னும் பல..

எனவே வாருங்கள். தொழில்வாய்ப்புகள் சிலருக்கு/ கணிசமானவர்களுக்கு/ பலருக்கு கிடைக்கும், கிடைக்கலாம். ஆனால் பயன்மிகு தொடர்புகள் நிச்சயம் மிகப் பலருக்கு கிடைக்கும்; உறுதியாக தமிழ் நட்பு எல்லோருக்கும் வசமாகும். The Rise என்ற எழுமின் 21ம் நூற்றாண்டில் தமிழரின் தலைநிமிர் காலத்திற்கான அதிகாலை வெளிச்சம், அறத் துணிவு, அன்பின் முழக்கம்!

பதிவுக் கட்டணம்: உடனடியான சலுகைப்பதிவு, $259.( மூன்று நாட்கள் மாநாட்டு அனுமதி, காலை, மதிய, இரவு உணவு-சிற்றுண்டிகள், விமானநிலைய வரவேற்பும் வழியனுப்புதலும்).

இருவர் இரு படுக்கைகள் கொண்ட ஒரு அறை பகிர்வதாயிருந்தால் மாநாட்டு வளாகம் அருகிலேயே விடுதிகள் நாளொன்றுக்கு நபருக்கு சுமார் ரூ. 1500 அளவில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது..

பதிவு செய்ய: www.therise.asia

தொலைபேசி: +60122375254
மின்னஞ்சல். : therisemsia@gmail.com

தமிழ்ப்பணி Fr. ம. ஜெகத் கஸ்பார்.
நிறுவனர், எழுமின்-The Rise.
#therise.
#therisemsia

by Swathi   on 14 Mar 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஸ்னோஃப்ளேக்கின் முதல் இந்திய அமெரிக்கத் தலைமை நிர்வாக அதிகாரியான தமிழர். ஸ்னோஃப்ளேக்கின் முதல் இந்திய அமெரிக்கத் தலைமை நிர்வாக அதிகாரியான தமிழர்.
கனடா க்யூபெக் நகரில் உலகின் மிகப்பெரிய குளிர்காலத் திருவிழா. கனடா க்யூபெக் நகரில் உலகின் மிகப்பெரிய குளிர்காலத் திருவிழா.
துபாய் நூலகத்துக்குத் தமிழக எழுத்தாளரின் நூல்கள் அன்பளிப்பு. துபாய் நூலகத்துக்குத் தமிழக எழுத்தாளரின் நூல்கள் அன்பளிப்பு.
வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை. வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை.
யாழ்ப்பாணம் தமிழ் விவசாயிகளுக்கு 234 ஏக்கர் நிலம்: இலங்கை அதிபர் ரணில் விடுவித்தார். யாழ்ப்பாணம் தமிழ் விவசாயிகளுக்கு 234 ஏக்கர் நிலம்: இலங்கை அதிபர் ரணில் விடுவித்தார்.
பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்குப் பொருத்தி சாதனை.. அமெரிக்காவில் நடந்த அதிசயம்! பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்குப் பொருத்தி சாதனை.. அமெரிக்காவில் நடந்த அதிசயம்!
அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழ்ப்பள்ளி சார்பில் 6.99 ஏக்கரில் தமிழ்ப்பள்ளிகளுக்குக் கட்டிடங்கள். அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழ்ப்பள்ளி சார்பில் 6.99 ஏக்கரில் தமிழ்ப்பள்ளிகளுக்குக் கட்டிடங்கள்.
நட்சத்திரங்களைச் சுற்றி உறைந்த ஆல்கஹால், அசிட்டிக் ஆசிட்: வெப் டெலஸ்கோப் கண்டறிந்தது என்ன? நட்சத்திரங்களைச் சுற்றி உறைந்த ஆல்கஹால், அசிட்டிக் ஆசிட்: வெப் டெலஸ்கோப் கண்டறிந்தது என்ன?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.