LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

45 ஆண்டுகளாகக் குப்பைமேடாக மாற்றப்பட்ட ஏரியைத் தூர்வாரி உயிரூட்டிய இளைஞர்கள்

 

பட்டுக்கோட்டையில் 45 ஆண்டுகளாகக் குப்பை மேடாக மாறிப் போன நகராட்சி ஏரியை, தன்னார்வலர்கள் தூர் வாரி 1.48 லட்சம் டன் குப்பையை அகற்றி புத்துயிர் அளித்துள்ளனர். 


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சியின் நீர் ஆதாரமாக 6 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிக்காச்சியப்பா ஏரி விளங்கியது. கடந்த 45 ஆண்டுகளாக நகராட்சியும், பொதுமக்களும், ஏரியில் குப்பை, கழிவுநீரைக் கொட்டி குப்பை மேடாக மாற்றினர்.


இதனால் அந்தப் பகுதியே துர்நாற்றம் வீசியது. சுமார் 15 அடி உயரத்துக்குக் குப்பை தேங்கி மலைபோல காட்சியளித்தது. இதனால் அந்தப் பகுதியில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து, இந்த ஏரியை மீட்க வேண்டும் என அப்பகுதி இளைஞர்கள், தன்னார்வலர்கள் முடிவு செய்தனர்.


இதையடுத்து பிக்காச்சியப்பா ஏரி மீட்புக் குழு உருவாக்கப்பட்டு பொதுமக்களிடம் நிதி திரட்டப்பட்டது. பின்னர் 2024-ம் ஆண்டு அக்டோபர் 19- ஆம் தேதி மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவன உதவியுடன் பிக்காச்சியப்பா ஏரி தூர்வாரும் பணி தொடங்கியது.


அதன்படி, இந்த ஏரியில் இருந்த 1 லட்சத்து 48 ஆயிரம் டன் எடையுள்ள குப்பையை அகற்றியும், 4.5 கோடி லிட்டர் கழிவு நீரை உறிஞ்சியும் தூர்வாரப்பட்டது. இந்தப் பணி நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதையடுத்து இந்த ஏரியை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டு, திறந்து வைத்ததுடன், தூர்வாரும் பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள், இளைஞர்களைப் பாராட்டினார்.


இது தொடர்பாகப் பேசிய தன்னார்வலர்கள், "பிக்காச்சியப்பா ஏரியைச் சுமார் 45 ஆண்டுகளாக நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டும் இடமாகப் பயன்படுத்தி வந்தது. இதையடுத்து அந்த ஏரியை மீட்கக் குழு அமைத்து, பலரிடம் இருந்து ரூ.7.50 லட்சம் நிதி திரட்டப்பட்டது. தூர்வாரும் பணியின்போது ஏரியிலிருந்து 1.48 லட்சம் டன் குப்பை, 4.5 கோடி லிட்டர் கழிவுநீரை அகற்றி, குப்பையை நகராட்சிக் குப்பைக் கிடங்குக்கும், கழிவுநீரைச் சுத்திகரிப்பு நிலையத்துக்கும் அனுப்பி வைத்துள்ளோம். இதுதவிர ஏரியில் குறுங்காடுகள் அமைத்துள்ளோம்.


இதற்குப் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் உதவிசெய்தன. மேலும், ஏரிக்கு நீர் கொண்டு வருவதற்கான வரத்து வாய்க்கால் சீரமைக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஏரியின் நுழைவாயில் மற்றும் கரையின் ஒரு பகுதியில் பூங்கா, நூலகம், பாதுகாப்பு வேலி, சிசிடிவி படக்கருவிகள் அமைக்க உள்ளோம். பலரின் உழைப்பால் குப்பை மேடாக இருந்த இடம், புத்துயிர் பெற்று மீண்டும் ஏரியாக உருப்பெற்றுள்ளது" என்று தெரிவித்தனர். 


தண்ணீரே எதிர்காலத்தில் மிகப்பெரும் சிக்கல்களை உருவாக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் அழியும் நிலையில் இருந்த ஒரு நீராதாரத்தை மீட்டு உயிரூட்டிய இளைஞர்களின் செயல் பாராட்டுக்குரியது. 
 

 

 

by   on 03 Mar 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கன்னியாகுமரியில் குறளங்காடி திறப்பு விழா கன்னியாகுமரியில் குறளங்காடி திறப்பு விழா
வலைத்தமிழ் ச.பார்த்தசாரதிக்கு  'தகைமைசால் திருக்குறள் பல்நோக்கு ஆளுமையர்' விருது! வலைத்தமிழ் ச.பார்த்தசாரதிக்கு 'தகைமைசால் திருக்குறள் பல்நோக்கு ஆளுமையர்' விருது!
ஜெய்சங்கர் சாலை ஆனது சென்னை கல்லூரி சாலை ஜெய்சங்கர் சாலை ஆனது சென்னை கல்லூரி சாலை
விவசாயத்துக்கு ட்ரோன்களைப் பயன்படுத்தும் தஞ்சாவூர் விவசாயிகள் விவசாயத்துக்கு ட்ரோன்களைப் பயன்படுத்தும் தஞ்சாவூர் விவசாயிகள்
ஸ்ரீ லஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமிகள் மகா சமாதியடைந்தார் ஸ்ரீ லஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமிகள் மகா சமாதியடைந்தார்
தாம்பரத்தில் ரூ.110 கோடியில் பிரமாண்ட மருத்துவமனை - முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் தாம்பரத்தில் ரூ.110 கோடியில் பிரமாண்ட மருத்துவமனை - முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஆகஸ்ட் 15 முதல்;சுங்கசாவடி ஆண்டு சந்தா  அமல் ஆகஸ்ட் 15 முதல்;சுங்கசாவடி ஆண்டு சந்தா அமல்
14 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை எட்டிய தமிழ்நாடு 14 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை எட்டிய தமிழ்நாடு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.