மாணவர்களின் வாசிப்பு திறனை ஊக்குவிக்க 'ஊஞ்சல் இதழ்','தேன் சிட்டு இதழ்' பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா
மாணவர்களின் வாசிப்பு திறனை ஊக்குவிக்க தொடக்கக்கல்வி குழந்தைகளுக்கு 'ஊஞ்சல்' இதழ்,உயர்வகுப்பு மாணவர்களுக்கு 'தேன் சிட்டு' இதழ் மற்றும் ஆசிரியர்களுக்கு 'கனவு ஆசிரியர்' இதழ் என மாதம் இருமுறை ஆங்கிலத்திலும் தமிழிலும் இனி இதழ்கள் வெளியாக உள்ளதாக பள்ளிக்கல்வி முதன்மைச் செயலர் காகர்லா உஷா தெரிவித்துள்ளார். இதற்கான 7.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதையும் அவர் தெரிவித்தார். இவ்விதழ்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள
பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் படைப்புகள் இடம் பெறும் என்றும் ஆசிரியர்களும் தங்கள் படைப்புத் திறனைவெளிக்கொணர இது சிறந்த தளமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
|