LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் திறனாய்வுத் தேர்வு (இணையவழி)

திருக்குறள் திறனாய்வுத் தேர்வு (இணையவழி) - Thirukkural Aptitude Test ( Online )

திருக்குறள் திறனாய்வுத் தேர்வு (இணையவழி) - Thirukkural Aptitude Test ( Online )

 

உலகெங்கும் இன்று திருக்குறளை மாணவர்கள் படிக்கிறார்கள். இந்த திருக்குறள் பாதிப்பானது இரண்டு நிலைகளில் செல்கிறது.

1. திருக்குறள் முற்றோதல் (இளநிலை) - மனப்பாடம் செய்து முழுமையாக குறளை ஒப்பித்தல்
2. திருக்குறள் பொருள் புரிந்து பின்பற்றுதல் (முதுநிலை) - பொருள் உணர்ந்து வாழ்வில் கடைபிடித்தல்.

முதல் நிலைக்குத் தேவையான அனைத்தையும் , கையேட்டையும், அணுகுமுறைகளையும் தொகுத்து, உருவாக்கி அறிவித்துள்ளோம்.

இரண்டாவது நிலை சற்று கடினமானது. பொருள் உணர்ந்ததை நேரடியாக நேர்காணல் நடத்தி அவர்கள் புரிந்துகொன்டுள்ள திருக்குறளின் பொருள் சரியாக உள்ளது என்பதை உறுதிப்படுத்துவது உலகெங்கும் எளிதான செயலல்ல. எனவே இதை இணையத்தில் கேள்வி கேட்டு எளிதாக பல்வேறு குழப்பக்கூடிய பதில்களைக் கொடுத்து அதில் சரியானதை தேர்ந்தெடுக்கும் உத்தியை பின்பற்ற திருக்குறள் திறனாய்வுத் தேர்வு ஒன்றை இணையவழியில் கொண்டுவரவேண்டும் என்று வலைத்தமிழ் குழு, உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் முன்னெடுக்கிறது. இது முழு தீர்வாக இருக்காது என்றாலும் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் குறள் பயிற்சி பெற்று வரும்போது இத்தேர்வு பெரும் பலனை ஏற்படுத்தும். இதற்கு ஒரு திருக்குறளுக்கு இரண்டு அல்லது மூன்று கேள்விகள் வீதம் சுமார் 3000+ கேள்விகளைத் தயாரித்துக் கொண்டுவரும் சோதனை முயற்சி வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.

இது இரண்டு குழுக்கம் ஈடுபடும்.

1. திருக்குறள் கேள்வி-பதில்களை உருவாக்குவது
2. தொழில்நுட்ப இணையதளத்தை உருவாக்குவது.
3. AI படங்கள்-வரைந்த படங்களை சேர்த்தல்
4. ஒலி (audio ) வடிவில் சேர்த்தல்.

தேவையான அறிஞர்கள்:
26 திருக்குறள் ஆளுமைகள் - ஐந்து அதிகாரங்கள் எடுத்தால் 130 அதிகாரங்களுக்கு கேள்விகள் தயாரிப்பது எளிது.

இதில் நம்பிக்கையுள்ளவர்கள் இணைந்து ஒரு நிதி ஏற்படுத்தும்போது, அல்லது போதிய நிதி கிடைக்கும்போது இத்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைக்கு வரும்.


தோராயமாக திட்டமிடுதல் :

1330 X 3 கேள்விகள் = 3990 கேள்விகள்

3990 கேள்வி-பதில்கள் X ரூபாய் 200 = 7,98,000/-

தொழில்நுட்ப செலவு = ரூபாய் 1,50,000/-

தோராயமான திட்ட செலவு: ரூபாய் 9,48,000/-


உதாரணம்:
வளவன் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பியதும், தன் தாய் சுரக்காய்ச்சலால் அவதிப் பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டான். வீட்டிலோ பணம் மருந்துக்குக் கூட இல்லை.


அருகிலுள்ள மருத்துவரிடம் ஓடிச் சென்று, "ஐயா, என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை. என் கையில் காசும் இல்லை. நீங்கள்தான் எப்படியாவாது என் அம்மா நலம்பெற உதவ வேண்டும் என்று கண்ணில் நீர் வழிய மனமுருகி வேண்டினான்.

அவன் வேண்டுகோளுக்கு இரங்கி, அம்மருத்துவர் அவன் இல்லத்துக்கு வந்தார் ; அம்மாவைப் பார்த்தார்.

"கவலைப்பட ஏதுமில்லை, வளவா!.
இந்த மருந்தை உன் தாயார் ஏதாவது உணவு உண்டபின் மூன்று வேளை கொடு, குணமாகி விடுவார்கள்" என்று சொல்லிவிட்டுப் பணமேதும் வாங்கிக் கொள்ளாமல் சென்று விட்டார்.

இப்பொழுது, வளவனுக்கு உணவுக்கு என்ன செய்வது என்ற யோசனை வந்தது.

கீழக்கண்டவற்றுள் எதனை அவன் செய்யலாம். அல்லது, வேறேதும் தீர்வுண்டா?.

அ) பக்கத்திலுள்ள கடையில், கடைக்காரனுக்குத் தெரியாமல் ஒரு ரொட்டியைத் தூக்கிக் கொண்டு வந்து (திருட்டு) கொடுத்து அம்மாவின் பசியை ஆற்றலாமா?.

ஆ) யாரிடமாவது இரந்து கேட்டு (பிச்சை) உணவுக்குப் பணம் பெறலாமா?.

இ) அம்மா துயர்படினும் பரவாயில்லை. திருடியோ பிச்சை எடுத்தோ அம்மாவின் பசியாற்ற மாட்டேன் என்று "இறைவா, அம்மாவின் உணவுக்கு ஏதாவது வழி காண்பி" என்று வேண்டிவிட்டு, அருகில் உள்ள கடையில் பகுதி நேரம் வேலை செய்கிறேன் எங்கள் அம்மாவிற்கு உணவு கொடுங்கள் என்று மாற்று வழி தேடலாமா?

ஈ ) இப்படி எதுவும் செய்யாமல் மேலே இருப்பவன் பார்த்துக்கொள்வான் என்று அமைதியாக தனது வீட்டுப்பாடத்தை செய்யச் சென்றுவிடலாமா?

 

 

by Swathi   on 05 Mar 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
Thirukkural - The Universal Book  (Compiled for Students of Non-Tamil) Thirukkural - The Universal Book (Compiled for Students of Non-Tamil)
மயிலாடுதுறையில் உலகத் திருக்குறள் ஆராய்ச்சி நடுவம் கூட்டம் மயிலாடுதுறையில் உலகத் திருக்குறள் ஆராய்ச்சி நடுவம் கூட்டம்
கல்வெட்டு எழுத்துகளில் திருக்குறள் பேரா. கிப்ட் சிரோமணி,  கோவிந்தராசு, சந்திரசேகரன் கல்வெட்டு எழுத்துகளில் திருக்குறள் பேரா. கிப்ட் சிரோமணி, கோவிந்தராசு, சந்திரசேகரன்
உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம்  - Thirukkural Translations in world Languages நூல் வெளியீடு உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம் - Thirukkural Translations in world Languages நூல் வெளியீடு
திருக்குறளில் வணிக மேலாண்மை  -கி. ஜான்சிராணி அ. வே. தனுஜா அ திருக்குறளில் வணிக மேலாண்மை -கி. ஜான்சிராணி அ. வே. தனுஜா அ
திருக்குறளில் தொழில்சார் திறன்கள்  - முனைவர் ப.சு. மூவேந்தன் திருக்குறளில் தொழில்சார் திறன்கள் - முனைவர் ப.சு. மூவேந்தன்
திருக்குறளில் வணிகவியல் மேலாண்மைக் கோட்பாடுகள் – வெ.அரங்கராசன் திருக்குறளில் வணிகவியல் மேலாண்மைக் கோட்பாடுகள் – வெ.அரங்கராசன்
திருக்குறளில் வணிகம் திருக்குறளில் வணிகம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.