LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

டென்மார்க் நாட்டில் நடைபெற்ற திருக்குறள் 'டெனிஸ் மொழி' மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா

டென்மார்க் நாட்டில் நடைபெற்ற 'டெனிஸ் மொழி' மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா

திருக்குறள் 'டெனிஸ் மொழி' மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா டென்மார்க் நாட்டில் Sena Palace,Agerskellet 26,8920Randers என்ற இடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. தமிழ் அறிவிப்பாளர் பி. எச்.அப்துல் ஹமீத் அவர்கள் சிறப்புரையாற்றி நூலினை வெளியிட்டார். பேர்ண் வள்ளுவன் பாடசாலை நிறுவனர் ஆசிரியரான பொன்னம்பலம் முருகவேல் பூநகரியான் தலைமை வகித்து தலைமையுரை ஆற்றினார். 

இந்நிகழ்வில் இடம்பெற்ற மாணவர்களது திருக்குறள் தொடர்பான கலை நிகழ்வுகள் கண்களையும் மனதினையும் கவர்வதாக அமைந்திருந்தன. சுதீன் ஈசாக் அவர்கள் நூலினைப்  பெற்றுக் கொண்டு உரையாற்றினார்கள். இராயன் அவர்கள் நிகழ்வினை தொகுத்து வழங்கினார். 

தமிழகத்திலிருந்து தமிழ் மகிழ்நன் சத்யராஜ்,தேனிசைச் செல்லப்பா, அறிவுமதி, சீமான், கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி நிகழ்வைச் சிறப்பித்தனர். 

கிறித்தவர்களின் புனித நூலான வேதாகமம் என்ற திருமறை அதிகமாக மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு முதலிடத்தில் உள்ளது. தமிழர்களின் திருமறையாக போற்றப்படும் திருக்குறள் 35 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆங்கில மொழியில் மட்டும் 58 திருக்குறள் மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ளன. வலைத்தமிழ் தொலைக்காட்சியானது திருக்குறள் டெனிஸ் மொழிபெயர்ப்பு நிகழ்வினை நேரலை செய்துள்ளது.

by R.Gnanajothi   on 08 Jul 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.