டென்மார்க் நாட்டில் நடைபெற்ற 'டெனிஸ் மொழி' மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா
திருக்குறள் 'டெனிஸ் மொழி' மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா டென்மார்க் நாட்டில் Sena Palace,Agerskellet 26,8920Randers என்ற இடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. தமிழ் அறிவிப்பாளர் பி. எச்.அப்துல் ஹமீத் அவர்கள் சிறப்புரையாற்றி நூலினை வெளியிட்டார். பேர்ண் வள்ளுவன் பாடசாலை நிறுவனர் ஆசிரியரான பொன்னம்பலம் முருகவேல் பூநகரியான் தலைமை வகித்து தலைமையுரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் இடம்பெற்ற மாணவர்களது திருக்குறள் தொடர்பான கலை நிகழ்வுகள் கண்களையும் மனதினையும் கவர்வதாக அமைந்திருந்தன. சுதீன் ஈசாக் அவர்கள் நூலினைப் பெற்றுக் கொண்டு உரையாற்றினார்கள். இராயன் அவர்கள் நிகழ்வினை தொகுத்து வழங்கினார்.
தமிழகத்திலிருந்து தமிழ் மகிழ்நன் சத்யராஜ்,தேனிசைச் செல்லப்பா, அறிவுமதி, சீமான், கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி நிகழ்வைச் சிறப்பித்தனர்.
கிறித்தவர்களின் புனித நூலான வேதாகமம் என்ற திருமறை அதிகமாக மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு முதலிடத்தில் உள்ளது. தமிழர்களின் திருமறையாக போற்றப்படும் திருக்குறள் 35 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆங்கில மொழியில் மட்டும் 58 திருக்குறள் மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ளன. வலைத்தமிழ் தொலைக்காட்சியானது திருக்குறள் டெனிஸ் மொழிபெயர்ப்பு நிகழ்வினை நேரலை செய்துள்ளது.
|