LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டிரம்ப் ஆற்றிய உரை

அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் ஜனவரி 20ம் தேதி,  இந்திய நேரப்படி 10.21 மணிக்கு இரண்டாவது முறையாகப் பதவியேற்றுக் கொண்டார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இந்த நிலையில், தலைநகர் வாஷிங்டனில் பதவியேற்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அதில், அவர் சுமார் 30 நிமிடங்கள் உரையாற்றினார்.

அவருடைய உரையின் தொகுப்பு இது.  
 
"அமெரிக்காவின் பொற்காலம் இப்போதிலிருந்து துவங்கிவிட்டது. இந்நாளிலிருந்து நம் நாடு மீண்டும் செழித்து, உலகம் முழுவதும் மதிக்கப்படும். ஒவ்வொரு நாடும் நம்மைப் பார்த்துப் பொறாமைப்படும். இனிமேலும், யாரும் நம்நாட்டைச் சாதகமாகப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்.
 
நமது இறையாண்மை மற்றும் பாதுகாப்பு மீட்டெடுக்கப்படும். நீதியின் அளவுகோல் மீண்டும் சமநிலைப்படுத்தப்படும். நமது நீதித்துறை மற்றும் அரசாங்கத்தின் வன்முறை நியாயமற்ற ஆயுத மயமாக்கல் போன்றவை முடிவுக்கு வரும். நம் நாட்டை வளமாக, சுதந்திரமான மற்றும் பெருமைமிக்க ஒரு தேசமாக உருவாக்குவதே எனது லட்சியம்.
அமெரிக்கா முன்பைவிட பெரிதாகவும், வலிமையானதாகவும், விதிவிலக்கானதாகவும் விரைவில் மாறும். தேசத்தின் வெற்றிக்கான ஒரு புதிய சகாப்தத்தின் துவக்கத்தில் நாம் உள்ளோம் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பதவிக்குத் திரும்புகிறேன்.
 
முதலில் நாம் எதிர்கொள்ளும் சவால்களில் நேர்மையாக இருக்க வேண்டும். இன்று நமது அரசாங்கம் நம்பிக்கை நெருக்கடியை எதிர்கொள்கிறது. ஏனென்றால், பல ஆண்டுகளாகத் தீவிரவாதம் மற்றும் ஊழல் நிறைந்த அரசு ஆட்சியில் இருந்தது. நம் சமூகத்தின் தூண்கள் முற்றிலும் உடைந்து சிதைந்து கிடைக்கும் நிலையில், உள்நாட்டின் ஒரு சிறிய நெருக்கடியைக் கூட சமாளிக்க முடியாத அரசாங்கம் மற்றும் வெளிநாடுகளில் ஏற்பட்ட பேரழிவின் போது தொடர்ச்சியாகத் தடுமாறிய ஓர் அரசாங்கத்தைக் கொண்டிருந்தோம்.
 
முன்னாள் அரசு சட்டத்தை மதிக்கும் அமெரிக்க மக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது. சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்த ஆபத்தான குற்றவாளிகளுக்கு அடைக்கலம் மற்றும் பாதுகாப்பை அளித்தது. வெளிநாட்டின் எல்லைகளைப் பாதுகாக்க வரம்பற்ற நிதியை வழங்கிய அரசால், சொந்த மக்களின் எல்லையைப் பாதுகாக்க மறுத்து விட்டது. அதனால், அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்படுகிறது. அதன் மூலம், ஊடுருவல் தடுக்கப்பட்டு, ஏற்கனவே சட்டவிரோதமாக ஊடுருவிய நபர்கள் வெளியேற்றப்படுவார்கள்.
 
இந்தத் தருணத்திலிருந்து அமெரிக்காவின் வீழ்ச்சி முடிந்து விட்டது. நமது நாட்டின் சுதந்திரங்களும், விதிகளும் இனி மறுக்கப்படாது. மேலும், அமெரிக்க அரசின் நேர்மை, திறமை, விசுவாசம் அனைத்தும் மீட்டெடுக்கப்படும். நமது குடியரசை மீட்டெடுப்பது அவ்வளவு எளிதல்ல. அதற்காகப் போராடும் என் உயிரைப் பறிக்க முயன்றனர். அது தான், என்மீதான துப்பாக்கிச் சூடு. அப்போது என் உயிர் ஒரு காரணத்திற்காகக் காப்பாற்றப்பட்டது. அது, அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்றவே கடவுளால் காப்பாற்றப்பட்டேன்.
 
அதனால், அமெரிக்க மக்களுக்காக, ஒவ்வொரு நாளும் கண்ணியத்துடனும், வலிமையுடனும், சக்தியுடனும் போராடுவோம். அனைத்து மக்களுக்கும் நம்பிக்கை, செழிப்பு, பாதுகாப்பு மற்றும் அமைதியைக் கொண்டு வரும் நோக்கத்துடன் முன்னேறிச் செல்லுவோம். அதனால், ஜனவரி 20 அமெரிக்க மக்களின் விடுதலை நாள் (Liberation Day).
ருப்பு மற்றும் ஹிஸ்பானிக் சமூகத்தினர் உங்கள் வாக்குகள் மூலம் எனக்குக் காட்டிய அன்பையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்தியதற்காக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். பிரச்சாரத்தில் உங்கள் குரல்களைக் கேட்டிருக்கிறேன். இனிவரும் ஆண்டுகளில் உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். மேலும், மார்ட்டின் லூதர் கிங் நினைவாக, அவரது கனவை நினைவாக்க ஒன்றாகச் சேர்ந்து பாடுபடுவோம்.
 
அச்சுறுத்தல் மற்றும் படையெடுப்புகளிலிருந்து நமது நாட்டைப் பாதுகாப்பதை விட ஒரு தலைமைத் தளபதியாக, எனக்கு வேறு உயர்ந்த பொறுப்பு எதுவும் இல்லை. எனது அமைச்சரவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும்
அவர்களது பொறுப்புகளைப் பயன்படுத்தி, பணவீக்கத்தைத் தோற்கடித்து, செலவு மற்றும் விலைகளையும் விரைவாகக் குறைக்க உத்தரவிடுவேன்.
 
அமெரிக்கா மீண்டும் ஓர் உற்பத்தி நாடாக மாறும். ஏனென்றால், வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு நம் நாட்டில் எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளது. அதனை நாம் பயன்படுத்தப் போகின்றோம். விலைகளைக் குறைத்து, நம்முடைய மூலப்பொருட்களை மீண்டும் மேலே கொண்டு வருவோம். மேலும், அதனை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்து, அமெரிக்காவை மீண்டும் ஒரு பணக்கார நாடாக மாற்றுவோம். அதை நம் காலடியில் உள்ள திரவத் தங்கம்தான் செய்யப் போகிறது.
 
அமெரிக்கத் தொழிலாளர்கள் மற்றும் குடும்பங்களைப் பாதுகாக்க நமது வர்த்தக அமைப்பை உடனடியாக மாற்றுவோம். அதாவது, நம் நாட்டை வளப்படுத்த நமது குடிமக்களுக்கு வரி விதிப்பதற்குப் பதிலாக, நமது மக்களை வளப்படுத்த வெளிநாடுகளுக்கு வரி விதிப்போம். இதன் மூலம், வெளிநாடுகளிலிருந்து நமது கருவூலத்தில் பணம் கொட்டும். இதன் மூலம், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அமெரிக்கா செழித்து வளரும்.
 
அமெரிக்காவிற்குப் பேச்சு சுதந்திரம் மீண்டும் கொண்டு வரப்படும். நாட்டில் ஆயுதக் கலாச்சாரத்துக்கு முடிவு கட்டப்படும். எனது தலைமையின் கீழ், அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் நியாயமான, சமமான மற்றும் பாரபட்சமற்ற நீதியை மீட்டெடுப்போம். அனைத்துப் பகுதிகளிலும் சட்டம் ஒழுங்கை மீண்டும் கொண்டு வருவோம்.
 
இனம் மற்றும் பாலினம் ரீதியாகப் பிரித்தெடுக்கும் அரசாங்கக் கொள்கை முடிவுக்குக் கொண்டுவரப்படும். இனிமேல், ஆண் - பெண் என இரு பாலினங்கள் மட்டுமே என்பது அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வக் கொள்கையாக இருக்கும். நம்முடைய படைகள் அமெரிக்காவின் எதிரிகளைத் தோற்கடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தச் சுதந்திரம் கொடுக்கப்படும். அந்த வகையில், 2017 ஆம் ஆண்டைப் போலவே, உலகம் இதுவரை கண்டிராத வலிமையான ராணுவத்தை மீண்டும் உருவாக்குவோம்.
 
அமெரிக்கா மதம், நம்பிக்கை, நல்லெண்ணம் போன்றவற்றால் மீண்டும் மதிக்கப்படும். நாம் வளமாக இருப்போம், நாம் பெருமைப்படுவோம், நாம் வலிமையாக இருப்போம், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெற்றி பெறுவோம், தோற்றுப் போக மாட்டோம். நாம் உடைக்கப்படவும் மாட்டோம், நாம் தோல்வியடையவும் மாட்டோம். இன்றிலிருந்து அமெரிக்கா ஒரு சுதந்திரமான, இறையாண்மை கொண்டு நாடாக இருக்கும். தைரியமாகவும், பெருமையாகவும் வாழ்வோம். நாம் தைரியமாகக் கனவு காண்போம், நம் வழியில் எதுவும் குறுக்கே நிற்காது. ஏனென்றால் நாம் அமெரிக்கர்கள். நமது பொற்காலம் துவங்கிவிட்டது." 

 

by   on 21 Jan 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இந்தோனேசியா- ஆச்சேவில் தமிழர்கள்  -முனைவர்.சுபாஷினி இந்தோனேசியா- ஆச்சேவில் தமிழர்கள் -முனைவர்.சுபாஷினி
அயலகத் தமிழர் நலனுக்கான திட்டங்களும் விளக்கங்களும்!  கூட்ட அறிக்கை(Minutes Of Meeting) அயலகத் தமிழர் நலனுக்கான திட்டங்களும் விளக்கங்களும்! கூட்ட அறிக்கை(Minutes Of Meeting)
இந்திய - அமெரிக்க உறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுகிறது -  ​​அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் இந்திய - அமெரிக்க உறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுகிறது - ​​அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர்
ஜெர்​மனி கொலோன் பல்​கலைக்​கழக நூலகத்தைப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின் ஜெர்​மனி கொலோன் பல்​கலைக்​கழக நூலகத்தைப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்
வாரத்தில் 4 முறை கொழும்பு விமானச் சேவைகளை மீண்டும் இயக்குகிறது குவைத் ஏர்வேஸ் வாரத்தில் 4 முறை கொழும்பு விமானச் சேவைகளை மீண்டும் இயக்குகிறது குவைத் ஏர்வேஸ்
ஹெச்1பி நுழைவு இசைவுத் திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கத் திட்டம் ஹெச்1பி நுழைவு இசைவுத் திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கத் திட்டம்
இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக செர்​ஜியோ கோர் நியமனம் இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக செர்​ஜியோ கோர் நியமனம்
2025 இறுதிக்குள் ஒரு  மில்லியன் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த ரஷ்யா திட்டம் 2025 இறுதிக்குள் ஒரு மில்லியன் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த ரஷ்யா திட்டம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.