LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

அதிபராகப் பதவியேற்றதும் தடாலடி உத்தரவுகளில் கையெழுத்திட்டு உலகை அதிர வைத்த டிரம்ப்

 

டொனால்டு டிரம்ப் அமெரிக்க‍ அதிபராகப் பதவி ஏற்ற பின்னர் வெள்ளை மாளிகையில் உள்ள தமது அலுவலகத்தில் பருவநிலை மாற்றம் முதல் குடியேற்றம் வரை பல்வேறு உத்தரவுகளில் கையெழுத்திட்டார். 

2021ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி அமெரிக்காவின் கேப்பிட்டல் ஹில்லில் வன்முறையில் ஈடுபட்டு கைதான தமது ஆதரவாளர்களுக்கு மன்னிப்பு அளிக்கும் உத்தரவிலும் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

2024ஆம் ஆண்டு அதிபர் வேட்பாளராகப் பரப்புரையின் போது அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையிலும் முதல் நாளில் சில உத்தரவுகளில் அவர் கையெழுத்திட்டார். எனினும் உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுகிறது என்ற உத்தரவில் அவர் கையெழுத்திட்டதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

அமெரிக்காவில் குடியேற்றம், குடியுரிமை பெறுவதை நிர்வகிக்கும் முறைகளை மறு வடிவமைக்கும் உத்தரவுகளில் முதல் நாளில் டிரம்ப் கையெழுத்திட்டார். நாட்டின் தெற்கு எல்லையில் தேசிய அவசர நிலையைப் பிரகடனம் செய்துள்ளார். அமெரிக்கக் குடியுரிமை இல்லாமல் தீவிரமான குற்றத்தில் ஈடுபட்ட ராணுவம் தொடர்புடையவர்கள் பெரும் அளவில் நீக்கப்படுவர் என்று டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார்.

அமெரிக்காவில் பிறந்தால் குடியுரிமை என்ற உத்தரவை ரத்து செய்யும் உத்தரவிலும் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

அமெரிக்காவின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமெரிக்காவில் பிறப்பவர்கள் அமெரிக்கக் குடியுரிமை படைத்தவர்கள் ஆவர். ஆனால், அதனை இப்போது டிரம்ப் ரத்து செய்திருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தும். சட்டரீதியாக இதனை எதிர்த்து வழக்குத் தொடரப்படலாம் என்று தெரிகிறது.

2020-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோற்றதாக அறிவிக்கப்பட்டதால் 2021ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி அவருடைய ஆதரவாளர்கள் கேப்பிட்டல் ஹில் பகுதியில் வன்முறையில் ஈடுபட்டனர். அதில் தொடர்புடைய டிரம்ப் ஆதரவாளர்கள் 1500 பேர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. 1500 பேருக்கும் டிரம்ப் மன்னிப்பு வழங்கும் உத்தரவில் கையெழுத்திட்டார்.

பன்முகத் தன்மையை எதிரொலிக்கும் திட்டங்கள், தன்பாலினத்தவர் உள்ளிட்ட மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சம உரிமை ஆகியவற்றை ரத்து செய்யும் உத்தரவுகளில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அரசு, வணிகம், சுகாதாரம் ஆகியவற்றில் பன்முகத்தன்மை, சம உரிமை ஆகியவற்றையும் ரத்து செய்தார். அமெரிக்க அரசானது இரண்டு பாலினத்தவர்களுக்கு மட்டுமே அங்கீகாரம் அளிக்கும் என்றும் அது ஆண், பெண் என்ற இரு பாலினத்தவர் மட்டுமே என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

டொனால்டு டிரம்ப் தமது முதலாவது ஆட்சிக் காலத்தின் போது எடுத்த நடவடிக்கைகளைப் போல இப்போதும் பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறும் உத்தரவிலும் கையெழுத்திட்டார். உலக அளவில் தொடர்ச்சியாகப் பேரழிவை ஏற்படுத்தும் காலநிலை நிகழ்வுகளின் காரணமாகப் புவி வெப்பமயமாதலை எதிர்த்துப் போராடும் உலக நாடுகளின் முயற்சியைப் புறக்கணிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

அமெரிக்காவின் முடிவு ஐ.நாவில் முறையாக சமர்ப்பிக்கப்பட்டப் பின்னர் பருவநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேற ஓர் ஆண்டு ஆகும்.
தேசிய எரிசக்தி அவசர நிலை என்ற உத்தரவிலும் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். உலகின் முன்னணி மற்றும் எரிவாயு உற்பத்தியாளர் என்ற விரிவாக்கத்தைப் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இதில் அவர் கையெழுத்திட்டுள்ளார். இது குறித்து அவர் தமது அதிபர் பதவி ஏற்பு விழா உரையிலும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க மத்திய அரசின் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது. இனி மத்திய அரசுப் பணியாளர்கள் அலுவலகத்துக்கு வர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தொற்றின்போது அமெரிக்க அரசு அதிகாரிகள் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான உத்தரவிலும் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். உலக சுகாதார நிறுவனத்தால் சீனாவை விடவும் அமெரிக்கா நேர்மையாக நடத்தப்படவில்லை என்று டிரம்ப் கூறியுள்ளார்.

 டிக்டாக் செயலிக்குத் தடை விதிக்கும் சட்டத்தை அமல்படுத்துவதற்காக முதல் கட்டமாக 75 நாட்களுக்கு இந்தச் செயலியை நிறுத்தி வைக்கும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் அமெரிக்காவில் டிக் டாக் செயலியை விநியோகித்தல், அப்டேட் செய்தல் ஆகியவற்றுக்குத் தடை விதிப்பதற்கான சட்டம் அமலுக்கு வருவதற்குத் தாமதம் ஆகும். டிக் டாக் செயலியை நடத்தும் சீன நிறுவனம் அமெரிக்க நிறுவனத்துக்கு 50 சதவிகித பங்குகளைத் தர வேண்டும் என்று டிரம்ப் நிர்ப்பந்தித்துள்ளார்.

தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளின் கருப்பு பட்டியலிலிருந்து கியூபாவை நீக்கும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். கியூபாவில் உள்ள சிறைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தின்
அடிப்படையில் இந்தப் பட்டியலிலிருந்து கியூபாவை டிரம்ப் நீக்கி உள்ளார்.
by   on 21 Jan 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
17 மணி நேர திக் திக் பயணம் - பத்திரமாகப் பூமி திரும்பினர் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் 17 மணி நேர திக் திக் பயணம் - பத்திரமாகப் பூமி திரும்பினர் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள்
2 நாள்களில் பூமிக்குத் திரும்பும் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் 2 நாள்களில் பூமிக்குத் திரும்பும் சுனிதா வில்லியம்ஸ், புட்ச்
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதில் மீண்டும் காலதாமதம் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதில் மீண்டும் காலதாமதம்
நாசாவில் பணியாற்றிய 23 பேர் பணி நீக்கம் நாசாவில் பணியாற்றிய 23 பேர் பணி நீக்கம்
இந்தியா உடனான உறவை மீண்டும் கட்டியெழுப்புவோம் -  கனடாவின்  புதிய பிரதமர்  மார்க் கார்னி இந்தியா உடனான உறவை மீண்டும் கட்டியெழுப்புவோம் - கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி
சுனிதா வில்லியம்ஸ், வில்மோர்   மார்ச் 19  அல்லது  20 -ல்  பூமிக்குத் திரும்புகிறார்கள்  - நாசா அறிவிப்பு சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் மார்ச் 19 அல்லது 20 -ல் பூமிக்குத் திரும்புகிறார்கள் - நாசா அறிவிப்பு
பாகிஸ்தானின் சிந்து நதிப் பகுதியில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான  தங்கப் படிமம் பாகிஸ்தானின் சிந்து நதிப் பகுதியில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான தங்கப் படிமம்
பாகிஸ்தானின் சிந்து நதிப் பகுதியில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான  தங்கப் படிமம் பாகிஸ்தானின் சிந்து நதிப் பகுதியில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான தங்கப் படிமம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.