LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்

 

இந்தியப் பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) புதிய தலைவராக மத்திய நிதித் துறைச் செயலாளர் துஹின் காந்தா பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போதைய செபி தலைவர் மாதவி புரி புச்சின் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி பதவியேற்றார். அவரது பதவிக் காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து செபியின் புதிய தலைவராக மத்திய நிதித் துறைச் செயலாளர் துஹின் காந்தா பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


இதுகுறித்து வியாழக்கிழமை இரவு வெளியிடப்பட்ட அரசாணையில், “மத்திய நிதி, வருவாய்த் துறைச் செயலாளர் துஹின் காந்தா பாண்டேவை செபி தலைவராக நியமிக்க மத்திய அமைச்சரவை நியமனங்கள் குழு ஒப்புதல் வழங்கி உள்ளது. பதவியேற்கும் நாளிலிருந்து 3 ஆண்டுகளுக்கு அவர் பதவியில் நீடிப்பார்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


கடந்த 1987-ம் ஆண்டு ஒடிசா பிரிவு இந்திய ஆட்சிப்பணி  அதிகாரியான துஹின் காந்தா பாண்டே மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி உள்ளார்.


பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளநிலைப் பட்டம் பெற்ற பாண்டே, பிரிட்டனின் பிர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றார். கடந்த ஆண்டு செப்டம்பரில் மத்திய நிதித் துறைச் செயலாளராக அவர் பதவியேற்றார்.
மத்திய நிதி நிலை அறிக்கையைத் தயார் செய்ததில் அவர் முக்கிய பங்கு வகித்தார். கடந்த ஜனவரி 9-ம் தேதி வருவாய்த் துறையின் செயலாளராகவும் அவர் பொறுப்பேற்றார். ஏர் இண்டியா நிறுவனத்துக்கு டாடா குழுமத்துக்கு விற்பனை செய்ததில் துஹின் காந்தா பாண்டே முக்கிய பங்காற்றினார்.

 

 

by   on 03 Mar 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பிரதமர் மோடிக்கு மொரிஷியஸ் நாட்டின் மிக உயர்ந்த தேசிய விருது பிரதமர் மோடிக்கு மொரிஷியஸ் நாட்டின் மிக உயர்ந்த தேசிய விருது
இனி எளிமையாக வருங்கால வைப்பு நிதியை ஏ.டி.எம் மூலம் எடுக்கலாம் - வருகிறது  EPFO 3.0 இனி எளிமையாக வருங்கால வைப்பு நிதியை ஏ.டி.எம் மூலம் எடுக்கலாம் - வருகிறது EPFO 3.0
இனி எளிமையாக வருங்கால வைப்பு நிதியை ஏ.டி.எம் மூலம் எடுக்கலாம் - வருகிறது  EPFO 3.0 இனி எளிமையாக வருங்கால வைப்பு நிதியை ஏ.டி.எம் மூலம் எடுக்கலாம் - வருகிறது EPFO 3.0
கர்நாடகா இருமொழிக் கொள்கையைச் செயல்படுத்துவது அவசியம் - முதல்வர் சித்தராமையாவுக்கு கன்னட வளர்ச்சி ஆணையத் தலைவர்  கடிதம் கர்நாடகா இருமொழிக் கொள்கையைச் செயல்படுத்துவது அவசியம் - முதல்வர் சித்தராமையாவுக்கு கன்னட வளர்ச்சி ஆணையத் தலைவர் கடிதம்
தமிழர்கள் உலகமெங்கும் சாதிக்கிறார்கள் - ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாராட்டு தமிழர்கள் உலகமெங்கும் சாதிக்கிறார்கள் - ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாராட்டு
அதிகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்பவர்களுக்கு மத்திய அரசு ஊக்கத் தொகை வழங்க வேண்டும்  - சந்திரபாபு நாயுடு அதிகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்பவர்களுக்கு மத்திய அரசு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் - சந்திரபாபு நாயுடு
கொல்கத்தா -சென்னை... 600 ரூபாய் கட்டணத்தில் வெறும் 3 மணி நேரத்தில் பயணிப்பது சாத்தியமா? கொல்கத்தா -சென்னை... 600 ரூபாய் கட்டணத்தில் வெறும் 3 மணி நேரத்தில் பயணிப்பது சாத்தியமா?
கர்நாடகாவில் அனைத்துப் பொருள்களிலும் கன்னட மொழியில் பெயர் கட்டாயம் - முதல்வர் சித்தராமையா கர்நாடகாவில் அனைத்துப் பொருள்களிலும் கன்னட மொழியில் பெயர் கட்டாயம் - முதல்வர் சித்தராமையா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.