விவசாய மின் இணைப்பு பெற விஏஓ சான்று மட்டும் போதும்
விவசாய மின் இணைப்பு தாமதமின்றி கிடைக்கும் வகையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின்சார வழங்கல் மற்றும் பகிர்மான விதிகளில் திருத்தங்கள் செய்துள்ளது. இதன்படி, விண்ணப்பதாரர் பிணை முறிவு பத்திரம் அளித்தால் போதும். விண்ணப்பம் பதிவு செய்யப்படும். விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலர் அளிக்கும் கிணறு மற்றும் நிலத்துக்கான உரிமைச்சான்று மட்டும் போதும். தயார் நிலையைத் தெரியப்படுத்தினால் 3 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்படும். ஒரு சர்வே எண்ணில் அல்லது உட்பிரிவு சர்வே எண்ணில் ஒருவருக்கு 2 கிணறுகள் இருக்கும் பட்சத்தில், தலா அரை ஏக்கர் பாசன நிலம் இருப்பின் ஒவ்வொரு கிணற்றுக்கும் தனித்தனி மின்இணைப்பு வழங்கப்படும். தமிழகத்துக்குள் எந்தப் பகுதிக்கும் மின் இணைப்பை இடமாற்றம் செய்ய அனுமதிக்கப்படும்.
|