LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

விருதுநகர், வெம்பக்கோட்டை கண்காட்சி அரங்கம் அமைச்சர்களால் துவங்கி வைக்கப்பட்டது

விருதுநகர், வெம்பக்கோட்டை கண்காட்சி அரங்கம் அமைச்சர்களால் துவங்கி வைக்கப்பட்டது

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் பகுதியில்,மேட்டுக்காடு என்ற இடத்தில் 2022 - ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் கட்ட அகழாய்வுப் பணியில் யானை தந்தத்தால் செய்த பொருட்கள், அரியவகை மணிகள், சுடுமண் பகடைக்காய், காதணிகள் போன்ற பழங்காலப் பொருட்கள் ஏராளமாக கிடைத்துள்ளன.அப்பொருட்களை மக்கள் பார்வையிடும் வகையில் கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை அமைச்சர்கள் திரு.இராமச்சந்திரன், திரு.தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தனர். 

திரு.இராமச்சந்திரன் அவர்கள் பேசும்போது கீழடிக்கு இணையாக விஜயகரிசல் குளத்திலும் பழம் பொருட்கள் கிடைத்துள்ளன என்றும்,2000 ஆண்டுகளுக்கு முன்னரே  அயல்நாடுகளுடன் கடல் வழி வணிகத் தொடர்பு கொண்டிருந்தவர்கள் தமிழர்கள் என்றும் கூறினார்.

திரு.தங்கம் தென்னரசு அவர்கள் பேசுகையில், இரண்டாம் கட்ட அகழாய்விலும் 900 பொருட்கள் கிடைத்துள்ளது. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று கூறினார்.விஜயகரிசல்குளத்தில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ளது. மூன்று அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டு, பல்வேறு பழம் பொருட்கள் மேலும் கிடைத்தவண்ணம் உள்ளன.

by R.Gnanajothi   on 19 May 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.