LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

சென்னை உயர்நீதிமன்றத்தில் பயன்பாட்டுக்கு வந்த வாய்ஸ் மெசேஜ் தொழில்நுட்பம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் வாய்ஸ் மெசேஜ் என்ற தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதற்கு வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்புக் கிடைத்துள்ளது. . இதனால் நீதிமன்ற உத்தரவுகள் வெகு விரைவில் வெளிவர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்)  தொழில்நுட்பம் வெகு வேகமாகப் பரவி வருகிறது. மனிதக் கண்டுபிடிப்பின் அடுத்த பரிணாமமாகக் கருதப்படும் இந்தத் தொழில் நுட்பம் மனிதனின் பல்வேறு பணிகளை எளிமையாக்கும். இந்தத் தொழில் நுட்பம் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இந்த நிலையில், இதன் முன்னோடியான வாய்ஸ் மெசேஜ் தொழில்நுட்பம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படுகிறது.


வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் உத்தரவைப் பிறப்பிக்கும்போதே தானாக திரையில் அச்சாகும். நீதிபதிகளின் சுருக்கெழுத்தர் இந்தப் பதிவை உடனே எடுத்து உத்தரவுகளைச் சரிபார்க்க முடியும். இதன்மூலம் வழக்குகளில் ஒரே நாளில் தீர்ப்பு, உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியும். 


இந்தத் தொழில்நுட்பத்தை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி டி.பரதச் சக்கரவர்த்தி  நீதிமன்றத்தில் பயன்படுத்தினார். அவர் வழக்கு விசாரணை முடிந்து உத்தரவுகளை இந்தத் தொழில்நுட்பம் மூலம் பிறப்பித்தபோது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர்கள் எல்இடி திரையில் உத்தரவுகளைப் பார்த்தனர். இதன் மூலம் நிலுவை வழக்குகள் பெருமளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

by hemavathi   on 04 Mar 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னைக்கு அருகே புதிய நகரம் - என்னென்ன வசதிகள் இருக்கும் தெரியுமா? சென்னைக்கு அருகே புதிய நகரம் - என்னென்ன வசதிகள் இருக்கும் தெரியுமா?
தமிழக நிதிநிலை அறிக்கை 2025- முக்கியமான 20 அறிவிப்புகள் தமிழக நிதிநிலை அறிக்கை 2025- முக்கியமான 20 அறிவிப்புகள்
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2025- எந்தத் துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு? தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2025- எந்தத் துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
இளையராஜாவின் அரை நூற்றாண்டு திரையிசைப் பயணத்தைக் கொண்டாடத்  தமிழக அரசு திட்டம் இளையராஜாவின் அரை நூற்றாண்டு திரையிசைப் பயணத்தைக் கொண்டாடத் தமிழக அரசு திட்டம்
நிதிநிலை அறிக்கை இலச்சினையில்  ரூ  - தமிழக அரசு அதிரடி நிதிநிலை அறிக்கை இலச்சினையில் ரூ - தமிழக அரசு அதிரடி
6  முதல் 9-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல்-8ம் தேதி தொடங்குகிறது 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல்-8ம் தேதி தொடங்குகிறது
மார்ச் 13-ல் மதுரை உலகத் தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழ்க்கூடல் மற்றும் 'உலக மொழிகளில் திருக்குறள்' நூல் வெளியீட்டு விழா மார்ச் 13-ல் மதுரை உலகத் தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழ்க்கூடல் மற்றும் 'உலக மொழிகளில் திருக்குறள்' நூல் வெளியீட்டு விழா
பாலியல் புகாரில் சிக்கிய 23 ஆசிரியர்கள் பணி நீக்கம்- சான்றிதழ்களை  ரத்து செய்யும் பணி தீவிரம் பாலியல் புகாரில் சிக்கிய 23 ஆசிரியர்கள் பணி நீக்கம்- சான்றிதழ்களை ரத்து செய்யும் பணி தீவிரம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.