LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

அமெரிக்கச் செயல் திறன் துறையிலிருந்து விவேக் ராமசாமி விலக காரணம் என்ன?

 அமெரிக்க அரசின் செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள விவேக் ராமசாமி, "இப்பணியை எலான் மஸ்க் குழு சிறப்பாகச் செய்யும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து, செயல் திறன் துறை (Department of Government Efficiency - DOGE) உருவாக்கப்பட்டது. இதனைத் தொழிலதிபரும் குடியரசுக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான விவேக் ராமசாமியும், தொழிலதிபர் எலான் மஸ்க்கும் இணைந்து கவனிப்பார்கள் என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் ஜனவரி.20-ம் தேதி  பதவியேற்ற நிலையில், செயல் திறன் துறை பொறுப்பிலிருந்து விலகுவதாக 39 வயதாகும் விவேக் ராமசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “செயல் திறன் துறை உருவாக்கத்தில் உதவுவதற்குக் கிடைத்த வாய்ப்பு எனக்குக் கிடைத்த கவுரவம். அரசாங்கத்தை நெறிப்படுத்துவதில் எலான் மற்றும் அவரது குழுவினர் வெற்றி பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “ஓஹியோ மாகாணத்துக்கான எனது எதிர்காலத் திட்டங்கள் குறித்து மிக விரைவாக நான் தெரிவிக்க வேண்டியிருக்கும். முக்கியமாக, அதிபர் டிரம்ப் அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்க உதவ நாங்கள் அனைவரும் தயாராக இருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஓஹியோ மாகாணத்தின் ஆளுநர் பதவிக்குப் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதால், விவேக் ராமசாமி அரசு செயல் திறன் துறையை விட்டு வெளியேறி இருப்பதாகக் கூறப்படுகிறது. 

இதனிடையே, செயல் திறன் துறை உருவாக்கத்தில் விவேக் ராமசாமியின் பங்கை வெள்ளை மாளிகை பாராட்டியுள்ளது.

இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் குழுவின் செய்தித் தொடர்பாளர் அன்னா கெல்லி, “செயல் திறன் துறை உருவாக்குவதில் விவேக் ராமசாமி முக்கிய பங்கு வகித்தார். அவர் விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிக்குப் போட்டியிடத் திட்டமிட்டுள்ளார். அதற்கு அவர் செயல் திறன் துறைக்கு வெளியே இருக்க வேண்டும் என்பதால், இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களாக அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்கு நாங்கள் அவருக்கு மிகுந்த நன்றி கூறுகிறோம். மேலும் அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குவதில் அவர் முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

2026-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஓஹியோ மாகாண ஆளுநர் தேர்தலில் தனது போட்டி குறித்த அறிவிப்பை முறையாக வெளியிடுவதற்கான சரியான தேதி குறித்து ராமசாமி யோசித்து வருகிறார். அவர் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஓஹியோவின் முதல் இந்திய அமெரிக்க ஆளுநராக அவர் இருப்பார்.

அமெரிக்காவின் மாகாண ஆளுநராக லூசியானாவில் பாபி ஜிண்டால், தெற்கு கரோலினாவில் நிக்கி ஹேலி ஆகிய இந்திய அமெரிக்கர்கள் இருந்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

ஓஹியோ ஆளுநருக்கான விவேக் ராமசாமியின் அறிவிப்பு அடுத்த வாரத் தொடக்கத்தில் வரலாம். குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்தலில் போட்டியிட்ட விவேக் ராமசாமி, அதில் தோல்வியடைந்தார். பின்னர் அவர் டிரம்பை ஆதரித்து, அவரது நெருங்கிய நம்பிக்கைக்குரியவராக உருவெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

by hemavathi   on 23 Jan 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
2026 முதல் எச் 1 பி விசா கட்டணம் 40 ஆயிரமாக அதிகரிப்பு 2026 முதல் எச் 1 பி விசா கட்டணம் 40 ஆயிரமாக அதிகரிப்பு
அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கனடா பொருள்களுக்கு 35 சதவிகித வரி -  ஆகஸ்ட் 1  முதல் அமலுக்கு வரும் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கனடா பொருள்களுக்கு 35 சதவிகித வரி - ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும்
இந்தியாவுடன் விரை​வில் வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும் - டொனால்டு ட்ரம்ப் இந்தியாவுடன் விரை​வில் வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும் - டொனால்டு ட்ரம்ப்
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை சார்பில் குன்றக்குடி அடிகளார் - நல்லகண்ணு நூற்றாண்டு விழா வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை சார்பில் குன்றக்குடி அடிகளார் - நல்லகண்ணு நூற்றாண்டு விழா
ஐக்கிய அரபு அமீரகத்துக்கான தங்க விசா பெறுவது எப்படி? ஐக்கிய அரபு அமீரகத்துக்கான தங்க விசா பெறுவது எப்படி?
பிரமதர் நரேந்திர மோடிக்குக் கானாவின் தேசிய விருது பிரமதர் நரேந்திர மோடிக்குக் கானாவின் தேசிய விருது
இந்தியா - அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் - வெள்ளை மாளிகை அறிவிப்பு இந்தியா - அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் - வெள்ளை மாளிகை அறிவிப்பு
600 ஆண்டுகள் பழமையான அறக்கட்டளை எனது மரணத்துக்குப் பிறகும் தொடரும் - தலாய்லாமா 600 ஆண்டுகள் பழமையான அறக்கட்டளை எனது மரணத்துக்குப் பிறகும் தொடரும் - தலாய்லாமா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.