கோவையில் அமைக்கப்பட்டுள்ள அருகலை(Wi-Fi) மரம்
கோயம்புத்தூரில் அணுகலை (Wi-Fi) மரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதியில் மக்கள் 9 மணி முதல் இரவு 10 மணி வரை இலவசமாக இணைய வசதியினை பெறுவர். இம்மரம் நேரு உள்விளையாட்டு அரங்கின் அருகே அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வ.உ.சி மைதானத்திலும் Wi-Fi மரம் அமைந்துள்ளது. துடியலூர்,காந்திபுரம் பேருந்து நிலையம், உக்கடம் பகுதியிலும் Wi-Fi மரம் அமைக்கப்பட இருக்கிறது. 'Smart City' திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
|