உலக மகளிர் குத்துச்சண்டை ,இந்திய வீராங்கனை நிகத் ஜரின் தங்கம்
உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி இஸ்தான்புல்லில் நடைபெற்றது. அதில் இந்தியாவின் சார்பில் 52 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்ட நிகத் ஜரின் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 26 வயதுடைய நிகத் தற்போதைய தெலுங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத் பகுதியைச் சேர்ந்தவர். இதற்கு முன் துருக்கி, கவுகாத்தி மற்றும் பாங்காக் ஆகிய நாடுகளில் நடைபெற்ற குத்துச்சண்டைகளிலும் பதக்கங்களை வென்றுள்ளார்.
இதற்கு முன்னர் மேரிகோம், லேகா, ஜென்னி, சரிதா தேவி ஆகியோர் உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டத்தினைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிப்போட்டியில் தாய்லாந்தின் ஜித்போங்கை 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து வெற்றிவாகை சூடியுள்ளார் இந்தியாவின் நிகத் ஜரின்.
|