|
||||||||
உலகின் வயதான பெண் டூமிகோ இடூகா காலமானார் |
||||||||
உலகின் வயதான பெண் எனக் கின்னஸ் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டவர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பிரான்யாஸ் மொரேரா (117) இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, உலகின் மிக வயதான நபராக டூமிகோ இடூகா அங்கீகரிக்கப்பட்டார்.
இந்நிலையில், வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக டூமிகோ இடூகா தற்போது உயிரிழந்துள்ளார் என ஜப்பானின் தெற்கு நகர மேயர் ரியோசுகே தகஷிமா தெரிவித்தார்.
ஜப்பானின் வர்த்தக மையமான ஒசாகா அருகிலுள்ள அஷியாவில் இடூகா வசித்து வந்தார். அவருக்கு 4 வாரிசுகள் மற்றும் 5 பேரக் குழந்தைகள் உள்ளனர். கடந்த 2019 முதல் நர்சிங் ஹோமில் தங்கி இருந்த அவர், கடந்த மாதம் 29-ம் தேதி மரணமடைந்தார்.
ஆஷியாவிற்கு அருகிலுள்ள ஒசாகா வணிக மையத்தில், அமெரிக்காவில் போர்டு மாடல் டி அறிமுகப்படுத்தப்படுவதற்கு நான்கு மாதங்களுக்கு முன் அவர் 1908, மே 23-ல் பிறந்தார். உலகப் போர்கள், தொற்றுநோய்கள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட்ட காலத்தில் இடூகா வாழ்ந்தார்.
தனது வயதான காலத்தில் வாழைப்பழங்கள், பால் போன்ற குளிர்பானமான கால்பிஸை ரசித்து குடித்து நிறைவான வாழ்க்கை வாழ்ந்தார் என ரியோசுகே தகஷிமா தெரிவித்துள்ளார்.
|
||||||||
by hemavathi on 05 Jan 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|