மகாராஷ்டிரா மாநில அமைச்சர் ஒருவரின் வீட்டுக்கு பால் வாங்கிக் கொடுப்பதற்காக மட்டும் மாதம், 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் அரசு ஊழியர் ஒருவர் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் கால்நடைத் துறை மற்றும் பால்வளத் துறை அமைச்சராக இருப்பவர் மதுகர் தியோராவ் சவான். இவர் வீடு, மந்திராலயா பகுதியில் உள்ளது. இவரது வீட்டிற்கு, காலையில் மட்டும் பால் வாங்கி தருவதற்காக, கணேசன் என்ற கால்நடைத்துறை ஊழியர் ஒருவரை நியமித்துள்ளார். இவர் தினமும், காலை 5:00 மணிக்கு அமைச்சரின் வீட்டிலிருந்து வெளியே வந்து, வோர்லி ஆரே என்ற இடத்தில் உள்ள, அரசின் பால் பண்ணைக்குச் சென்று, அமைச்சர் வீட்டுக்கு 5 லிட்டர் பால் வாங்கி மீண்டும் பஸ் பிடித்து, அமைச்சர் வீட்டில், கொடுத்து விட்டு, 8:00 மணிக்கு வீடு திரும்பி விடுவார். இந்த மூன்று மணிநேர கடின உழைப்பிற்காக மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறதாம். இதனை கண்காணித்த, பத்திரிகை நிருபர் ஒருவர், இதற்கான ஆதரங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளார்.
|