LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

ஆதார் இணைக்க கட்டாயப்படுத்தும் நிறுவனங்களுக்கு ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்- மத்திய அரசு அறிவிப்பு!

ஆதார் இணைக்க கட்டாயப்படுத்தும் நிறுவனங்களுக்கு ரூ. 1 கோடி வரை அபராதமும், நிறுவன ஊழியர்களுக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. 

தனியார் நிறுவனங்கள் ஆதார் இணைப்பை கட்டாயமாக்கக் கூடாது என்றும் அரசின் பொதுமக்கள் நல சேவைகளைப் பெறுவதற்காக மட்டுமே ஆதார் இணைப்பு பயன்படுத்தப்படலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. ஆனால் அதற்குப் பிறகும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், வங்கிகள் தொடர்ந்து ஆதார் இணைப்பைக் கோரி வருகின்றன.

எனவே, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு படி ஆதார் பயன்பாடு தொடர்பான சட்டங்களில் தேவையான திருத்தங்களை அரசு செய்துள்ளது. இந்திய தொலைத்தொடர்பு சட்டம் மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டம் ஆகியவற்றில் ஆதார் தொடர்பான பிரிவுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. 

இந்த திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கி உள்ளது. அதன்படி, தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள், வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் அடையாள சான்று மற்றும் பிற கேஒய்சி விவரங்களுக்காக ஆதார் எண் இணைப்பைக் கட்டாயமாக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விதிமுறையை மீறும் நிறுவனங்கள் மீது  நடவடிக்கை எடுக்க இந்தச் சட்டம் வழி செய்துள்ளது.

சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரிடம் இருந்து தனிநபர் விவரங்களைப் பெறுவதற்குத் தேவையான அனுமதியைப் பெற வேண்டும். இல்லாவிட்டால் ரூ. 10 ஆயிரம் அபராதமும் 3 ஆண்டு சிறைதண்டனையும் விதிக்கப்படும். அனுமதி இல்லாமல் யாருடைய அடையாள அட்டையோ, புகைப்படமோ வெளியானால் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்படும். தனிநபர் விவரங்களை தவறாகப் பயன்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு ரூ. 50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை அபராதமும் 10 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

by Mani Bharathi   on 20 Dec 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.