|
|||||
ரயில் சீட்டு முன்பதிவு செய்ய இன்றுமுதல் ஆதார் கட்டாயம் |
|||||
![]()
ரயில் முன்பதிவு சீட்டைப் பெறுவதற்குப் பெரும்பாலானோர் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளக் கணக்கைப் பயன்படுத்தி வருகின்றனர். போலி ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளக் கணக்குகளால் தக்கல் முன்பதிவு சீட்டு பெறுவதில் பயணிகள் பெரும் சிக்கலைச் சந்தித்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து சுமார் 2½ கோடி போலி ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளக் கணக்குகளை ரயில்வே நிர்வாகம் நீக்கியுள்ளது. அதேவேளையில், ஜூலை 1-ந் தேதி முதல் ஆதார் ஓ.டி.பி. அடிப்படையில் மட்டுமே தக்கல் முன்பதிவு சீட்டுகளைப் பெற முடியும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்து இருந்தது.
ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளக் கணக்குகளை வைத்துள்ள பயனாளர்கள் தங்களது ஆதாரை இணைக்க ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியது. இந்த நிலையில், ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மற்றும் செயலியில், ஆதார் உறுதிப்படுத்தப்பட்டவர்கள் மட்டுமே இன்று முதல் 'தக்கல்' சீட்டு முன்பதிவு செய்ய முடியும். பயனர்களின் அடையாளத்தை உறுதி செய்ய ஆதார் மட்டுமின்றி, அரசு அங்கீகரித்த பிற அடையாள ஆவணங்களும் விரைவில் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
|
|||||
by hemavathi on 30 Jun 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|