LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழகத்தில் விடுமுறைக்கு பிறகு புதிய சாப்ட்வேருடன் ஆதார் சேவை மையங்கள் திறப்பு!

தமிழகம் முழுவதும் ஒரு வார விடுமுறைக்கு பிறகு புதிய சாப்ட்வேருடன் ஆதார் சேவை மையங்கள் செயல்பாட்டுக்கு வந்தது. 

நாடு முழுவதும் தனிநபர் ஒவ்வொருவரும் ஆதார் அட்டையை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்கள், அனைத்து தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களில் ஆதார் நிரந்தர  சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. 

இங்கு புதிய ஆதார் அட்டை வழங்கும் பணிகளும், ஆதார் அட்டையில், பிழை திருத்தும் பணிகளும் நடக்கிறது. இந்த நிலையில், மாநிலம் முழுவதும் ஆதார் சேவை மையங்களில் உள்ள தனிநபர்களின் புதிய ஆதார் மற்றும் திருத்தம் மேற்கொள்வதற்கான புதிய சாப்ட்வேர் அப்டேட் செய்யும் பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. 

இதற்காக ஒரு வாரம் ஆதார் மையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.  விடுமுறை முடிந்து, அனைத்து மையங்களும் புதிய சாப்ட்வேருடன் செயல்பட தொடங்கி உள்ளன.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: 

புதிய சாப்ட்வேர் அப்டேட் செய்து புதிய தொழில்நுட்பத்தில் ஆதார் ஐடி இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதற்கான பணிகள் கடந்த 18ம் தேதி முதல் தொடங்கி, முடிவடைந்தது. இந்த புதிய சாப்ட்வேரின் முக்கிய அம்சங்களாக பிறந்த தேதியை ஒருமுறை மட்டுமே மாற்ற முடியும். அதுவும் ஒரு வயது வித்தியாசம் மட்டுமே மாற்ற இயலும்.

பெயர்ப் பிழை, திருத்தம் மற்றும் பெயர் திருத்தம், ஆண், பெண் பாலின திருத்தம் ஆகியவற்றை ஒருமுறை மட்டுமே மாற்றம் செய்ய முடியும். அதிக வயது வித்தியாசம் வருபவர்கள் பெங்களூரு தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு வழிகாட்டுதல் படி திருத்தம் மேற்கொள்ள வேண்டும். 

மேலும் விவரங்களுக்கு 1947 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் www.uidai.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி கொள்ளலாம். 5 வயது ஆனவர்களுக்கு பிறந்த தேதியை மாற்ற கல்விச் சான்றிதழ் இல்லையெனில், அரசு பதிவு பெற்ற அலுவலரின் அட்டெஸ்டட் சான்றிதழை இணைக்க வேண்டும். இது அனைவருக்கும் பொருந்தும். 

மேலும் பேப்பரில் புகைப்படம் ஒட்டி அட்டெஸ்டட் செய்த சான்று ஏற்றுக் கொள்ள இயலாது. பொதுமக்கள் அனைத்து விவரங்களையும் ஆதார் பதிவு செய்யும் ஆபரேட்டரிடம் கேட்டு கொள்ள வேண்டும். 

தனி நபரின் ஆலோசனை பெற்று ஏமாற வேண்டாம். இந்தப் புதிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

by Mani Bharathi   on 28 Feb 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.