|
|||||
5 வயதுக்கு குறைவான 6.71 கோடி குழந்தைகளுக்கு ஆதார் கார்டுகள்- மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் தகவல்! |
|||||
5 வயதுக்கு குறைவான 6.71 கோடி குழந்தைகளுக்கு ஆதார் கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் தெரிவித்தார். மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் பேசியதாவது: 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை 121,08,54,977 ஆகும். நவம்பர் 30, 2018 வரையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) 122.90 கோடி ஆதார் கார்டுகளை வழங்கி உள்ளது. மேலும் 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு 6.71 கோடி ஆதார் கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளது. 5 வயது முதல் 18 வயது வரையிலான மக்களுக்கு 29.02 கோடி கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளது. 2011-ம் ஆண்டு, கணக்கெடுப்பின் படி ஒரு வருடத்திற்குள் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 2,08,98,228 ஆகும். எஸ்ஆர்எஸ் சமீபத்திய தகவல்கள் படி 2016-ம் ஆண்டிற்கான பிறப்பு விகிதம் 20.4 ஆகவும், இறப்பு விகிதம் 6.4 ஆகவும் உள்ளது. எஸ்ஆர்எஸ், நாடெங்கிலும் தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்கள் மற்றும் நகர்ப்புறத் தொகுதிகள் அடிப்படையில் தொடர்ச்சியான ஆய்வு பணியை மேற்கொள்கிறது. |
|||||
by Mani Bharathi on 03 Jan 2019 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|