LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் இலக்கணம் (Tamil Grammar )

ஆகுபெயர் என்றால் என்ன?

ஆகுபெயர் கேள்விப்பட்டிருப்பீர்கள். பெயராக ஆகிவிட்ட ஒன்றைப் பற்றி அது சொல்கிறது என்பது ஆகுபெயர் என்னும் அந்தச் சொல்லாலேயே விளங்குகிறது.

ஒன்றுக்குப் பெயராக வழங்கி வந்த ஒரு சொல் மற்றொன்றுக்கும் பெயராக ஆகி நிற்பதுதான் ஆகுபெயர். இலக்கணப்படி தொன்று தொட்டு அவ்வாறு ஆகிவர வேண்டும். தற்காலத்திலும் ஆகுபெயரின் புழக்கம் அதிகம்தான் என்பதால் தொன்று தொட வேண்டியதில்லை என்பது என் கருத்து.

தலைவா ! உன் வருகைக்காக மதுரை காத்திருக்கிறது.

மயில் வந்தாள். பிறகுதான் காளைக்கு உயிர்வந்தது.

மேலுள்ள இரண்டு வாக்கியங்களைப் பாருங்கள். தலைவனுக்காக மதுரை காத்திருக்கிறதாம். மதுரையில் வாழ்கின்ற மக்கள் தலைவன் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள் - இதுதான் உணர்த்த விரும்பும் பொருள். மதுரை என்னும் ஊர்ப்பெயர் அங்கு வாழும் மக்களுக்கும் பெயராக ஆகி வந்தது. அதுவே ஆகுபெயர்.

இரண்டாம் வாக்கியத்தில் மயில் என்பது காதலிக்கும் காளை என்பது காதலனுக்கும் பெயராக ஆகிவிட்டது. ஆகுபெயர் !

தற்காலப் பேச்சு/எழுத்து வழக்கில் ஆகுபெயர்கள் அருமையாகப் பயன்பட்டுக்கொண்டிருக்கின்றன.

சென்னை என்னை ‘போடா வெண்ணெய்’ என்றது.
திருநெல்வேலிக்கே அல்வாவா ?

- கவிஞர் மகுடேசுவரன்

by Swathi   on 20 Dec 2014  5 Comments
Tags: ஆகு பெயர்   Aagu Peyar                 
 தொடர்புடையவை-Related Articles
ஆகுபெயர் என்றால் என்ன? ஆகுபெயர் என்றால் என்ன?
கருத்துகள்
09-Dec-2016 23:12:24 senthilvadivu said : Report Abuse
ஆகுபெயர் எளிமையான முறையில் உள்ளது.
 
17-Oct-2016 10:16:09 srikrupa said : Report Abuse
நல்ல இருக்கு
 
21-Sep-2016 00:32:09 abinaya said : Report Abuse
ஆகுபெயர் என்பது ஒரு பெயரோடு தொடர்புடைய மற்றோரு பொருளுக்கு பெயராகி வருவது ஆகும். எடுத்துக்காட்டு . வெள்ளை அடித்தான்
 
20-Sep-2016 03:07:14 v . muthukalanchiyam said : Report Abuse
ஆகுபெயர் என்பது ஒன்றன் பெயராகி வரும் பொது அதனோடு தொடர்புடைய மற்றோரு பொருளுக்கு பெரியராகி வருவது ஆகுபெயர் ஆகும். எடுத்துக்காட்டு. பலா சுவையாக இருந்தது.
 
27-Jul-2015 02:25:52 B.vijayalakshmi said : Report Abuse
ஐயா etherku என்ன அங்கில்ல வாக்கியம் எனக்கு விளக்க முடியுமா
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.