|
|||||
டெல்லி முழுவதும் 2 லட்சம் கழிவறைகள், மின்சார கட்டணம் பாதியாக குறைப்பு - ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை !! |
|||||
டெல்லி சட்டசபைத் தேர்தலில் முதல்முறையாக போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று வெளியிட்டார்.
அந்த தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள் :
ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், 15 நாட்களில் ஜன்லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும். இதற்காகவே, டிசம்பர், 29ம் தேதி ராம்லீலா மைதானத்தில், பொதுமக்கள் முன்னிலையில், டில்லி மாநில சட்டசபைக் கூட்டம் நடத்தப்படும். முதல் நாளே, ஜன்லோக்பால் மசோதா, விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.
தற்போது டெல்லியில் கடும் மின்சாரத் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்கு காரணம் மின்சாரத்தை தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்குவதே, இந்த நிலைமை மாற்றியமைக்கப்பட்டு, மின் கட்டணமும் 50 சதவீதம் அளவுக்கு குறைக்கப்படும்.
மக்கள் குடியிருக்கும் அங்கீகாரமற்ற காலனிகள் வரன்முறை செய்யப்படும்.
காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்.
ஆட்டோ கட்டணங்கள் திருத்தியமைக்கப்படும்.
பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யும் வகையில் விரைவு நீதிமன்றங்களை உருவாக்கி, பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைந்து முடித்து தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
பொதுமக்கள், 50 லட்சம் பேருக்காக நகரம் முழுவதும் குழாய்கள் அமைக்கப்பட்டு, வீடுகளுக்கு தினமும் 700 லிட்டர் தண்ணீர் இலவசமாக வழங்கப்படும்.
ஏழை மக்களுக்கு சிறந்த சுகாதார வசதிகள் செய்து கொடுக்கும் வகையில் 2 லட்சம் கழிவறைகள், டில்லி முழுவதும் அமைக்கப்படும்.
இவ்வாறு ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. |
|||||
by Swathi on 20 Nov 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|