|
|||||
பொங்கல் ரேஸில் மூன்று படங்கள் - யார் யாருக்கு எவ்வளவு தியேட்டர் !! |
|||||
தமிழ் சினிமாவை பொறுத்த வரை மிகப் பெரிய வசூலைப் பெற்றுத் தரும் சீஸன் என்றால் அது பொங்கல் தான். கிட்டத்தட்ட அனைவருக்கும் ஒரு வாரம் சேர்ந்தாற்போல் விடுமுறை வருவது இந்த ஒரு சீஸனில்தான். அதனால் தான் பெரிய நடிகர்களின் படங்கள் இந்த சீஸனைக் குறிவைப்பது வாடிக்கை. இந்தப் பொங்கலுக்கு 3 பெரிய படங்கள் வெளியாகின்றன. அவை ஷங்கரின் ஐ, அஜீத் நடித்த என்னை அறிந்தால், விஷால் நடித்துள்ள ஆம்பள ஆகியவைதான் அந்த மூன்று படங்கள். ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் ஐ படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. தமிழகத்தில் சுமார் 450 அரங்குகள் வரை ஐ படத்திற்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கு சற்றும் சளைக்காத முக்கியத்துவம் கொண்ட படம் என்னை அறிந்தால். காரணம் அது அஜீத்தின் படம். இந்தப் படத்துக்கும் அதிக அரங்குகளை எதிர்ப்பார்க்கிறார்கள். ஆனால் ஐ நெருக்கடி காரணமாக 300 அரங்குகள் வரைதான் என்னை அறிந்தால் படத்திற்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறதாம். சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ஆம்பள படத்துக்கு டார்கெட்டும் இதே 300 அரங்குகள் தான். எப்படியாவது அதிக தியேட்டர்களை பிடித்துவிடும் முயற்சியில் இப்போதே தீவிரமாகிவிட்டார் மூன்று படங்களின் தயாரிப்பாளர்கள். |
|||||
by Swathi on 24 Nov 2014 0 Comments | |||||
Tags: 2015 Pongal Release Aambala I Movie Yennai Arindhaal பொங்கல் ரிலீஸ் ஆம்பள ஐ | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|