டெல்லியில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழுக் கூட்டம் இன்று அவசரமாக கூடுகிறது.
டெல்லி சட்ட சபையில் மொத்தம் உள்ள 70 இடங்களில் கைப்பற்றிய 28 இடங்களைக் கைப்பற்றியுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு, காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சியினர் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர். அந்த ஆதரவை ஏற்பதற்கு, இருகட்சிகளுக்கு 18 நிபந்தனைகளை விதித்து ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் கடிதம் ஒன்றை எழுதினார்.
இது தொடர்பாக பதில் அளித்துள்ள காங்கிரஸ், 16 நிபந்தனைகளை ஏற்பதாக தெரிவித்துள்ளது. இந் நிலையில், இது குறித்து ஆய்வு செய்வதற்கும், புதிய அரசு அமைப்பது குறித்தும் ஆலோசிப்பதற்காகவும், ஆம்ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழுக் கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடந்து முடிந்த டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 32 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றி பெற்றது.
|