LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

எந்த கட்சியும் ஆட்சி அமைக்க உரிமை கோராததால் !! டெல்லியில் குடியரசு தலைவர் ஆட்சி அமலாகும் நிலை !!

டெல்லி சட்டசபைத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

 

கடந்த வாரம் நடந்து முடிந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பா.ஜனதா 31 தொகுதியிலும், ஆம் ஆத்மி 28 தொகுதியிலும், காங்கிரஸ் 8 மற்றும் இதர கட்சிகள் 3 தொகுதியிலும் வெற்றி பெற்றன. இந்நிலையில் தங்களுக்கு ஆட்சியமைக்க தேவையான 36 இடங்கள் கிடைக்கவில்லை என்பதால், தாங்கள் ஆட்சியமைக்க உரிமை கோரப்போவதில்லை என பா.ஜனதா முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஹர்ஷவர்தன் நேற்று முன் தினம் அறிவித்துவிட்டார். 

 

அதேபோல், இரண்டாம் இடத்தை கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சியும், எதிர்க்கட்சி வரிசையில் அமரப்போவதாகவும், ஆட்சியமைக்க யாருடனும் கூட்டணி அமைக்கப்போவதில்லை என்றும், மேலும் டெல்லி சட்டசபைக்கு மீண்டும் தேர்தலை சந்திக்க தயார் என்றும் தெரிவித்துள்ளது. அதிக தொகுதிகளில் வெற்றிப் பெற்ற கட்சிகளின் இந்தத் திடீர் முடிவால், என்ன செய்வது என்பது குறித்து டெல்லி ஆளுனர் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். எந்த கட்சியுமே ஆட்சி அமைக்க முன்வராததால், இப்போதைக்கு டெல்லி சட்டசபையை முடக்கிவைத்துவிட்டு, குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த அவர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 6 மாத காலத்திற்குள் நிலைமையில் மாற்றம் வராவிட்டால், சட்டசபையை கலைத்துவிட்டு, மீண்டும் தேர்தல் நடத்த பரிந்துரைக்க அவர் முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

 

ஆம் ஆத்மி கட்சிக்கு ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு :

 

இதனிடையே ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க ஆதரவு தருவதாக ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சி அறிவித்துள்ளது.  அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராகவேண்டும் என்றும் ஆகவே ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது. ஆனால் இதனை ஏற்க ஆம் ஆத்மி கட்சி தயாராக இல்லை எனத் தெரிகிறது.

by Swathi   on 09 Dec 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.