டில்லியில் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் ஆலோசனை கமிட்டி ஒப்புதல் வழங்கியுள்ளதை அடுத்து, துணைநிலை ஆளுநரை அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து, ஆட்சி அமைப்பதற்கான முடிவை தெரிவிக்க உள்ளார். மேலும் முதல்வர் பொறுப்பை கட்சியின் வேறு தலைவர்கள் ஏற்பார்கள் என்று கெஜ்ரிவால் கூறி வந்த நிலையில், அதை ஏற்க கட்சி அரசியல் ஆலோசனைக்குழு மறுத்துவிட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலே முதல்வராக வேணடும் என முடிவெடுத்தது. இதையடுத்து, வரும் 26ம் தேதி, டில்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில், அரவிந்த் கெஜ்ரிவால் டில்லியின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்ளும் விழா நடைபெற உள்ளது. இதை வரவேற்றுள்ள முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், 'ஆம் ஆத்மிக்கு எனது வாழ்த்துக்கள்,' என்றார்.
|