LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம்

ஆறு நிமிடப் பதவி

இருவர் பேசிக்கொண்டிருந்தனர் . ஒருவர் சொன்னார் “ வானவெளி ஆராய்ச்சியில் வேகம் போதவில்லை . சந்திர மண்டலத்துக்கும் , செவ்வாய்மண்டலத்துக்கும் தான் ராக்கெட் அனுப்புகிறார்கள் . அந்தத் துறைக்கு நான் தலைவரானால் புதுமை செய்து பரபரப்பை உண்டாக்குவேன் . ”

“அப்படி என்ன செய்வீர்கள்?”

“சூரிய மண்டலத்துக்கே ராக்கெட் விட ஏற்பாடு செய்வேன்”

“சூரியனில் உஷ்ணம் அதிகம் ஆயிற்றே ராக்கெட் அங்கு சென்றால் எரிந்து விடும்”

“அது எனக்கு தெரியாதா? பகலில் ராக்கெட் அனுப்பினால் தானே பிரச்சினை இரவில் அனுப்ப ஏற்பாடு செய்வேன்”

இப்படி அடிப்படையே தெரியாமல் பதவிக்கு வருபவர்கள் உண்டு .

ஆனால் எல்லா ஆற்றலும் இருந்தும் பதவியை துச்சமென நினைப்பவரும் உண்டு . பெருந்தலைவர் காமராசர் இரண்டாம் வகையைச்சேர்ந்தவர் . இவரது அரசியல் பணி விரிவடைந்து விடுதலைப் போராட்டமானது . எண்ணற்ற போராட்டங்களை முன் நின்று நடத்தினார் . தண்டனைகளையும் உறுதியோடு ஏற்றார் . 1920- ல் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார் . 1923- இல் மதுரையில் கள்ளுக்கடை மறியலை வெற்றிகரமாக நடத்தினார் . 1928- ல் சைமன் கமிஷன் குழுவை எதிர்த்துப் போராடினார் . 1925- ல் கர்மவீரர் காமராசர் தானாக ஒரு தொண்டர் படையைத் திரட்டிக்கொண்டுபோய்ச் சென்னை வந்திருந்த காந்தியடிகளைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது . வெள்ளைக்காரத்தலைவர் நீல் என்பவனின் சிலையை சென்னை மவுண்ட் ரோட்டிலிருந்து அகற்றும்போராட்டம் பற்றிய சந்திப்பு அது . காங்கிரஸ் மாநாட்டிலேயே அதுபற்றி தீர்மானம் நிறைவேற்றப்படும் அளவுக்கு அப்பச்சியின் போராட்டம் நாடு தழுவிய அளவில் பெயர் பெற்றிருந்தது . நீல் சிலை நீக்கப்பட்ட பின்னரே போராட்டம் ஓய்ந்தது . இப்படி போராட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே தேர்தலையும் சந்திக்கின்ற வாய்ப்புக் கிட்டியது . விருதுநகர் நகர சபைத் தேர்தலில் சிறையில் இருந்தபடியே வெற்றி வாகை சூடினார் . நகர சபைத்தலைவர் பதவி வழங்கப்பட்ட போது அதை ஏற்க மறுத்தார் . வெள்ளைக்காரன் காலத்து பதவி அவருக்குப் பிடிக்கவில்லை . ஆனால் நண்பர்கள் விடாப்பிடியாக வற்புறுத்தினார்கள் . அவர்களுக்காக ஆறு நிமிடங்கள் மட்டுமே அந்த நாற்காலியில் இருந்து விட்டு எழுந்துவிட்டார் காமராசர் . இத்தகைய அரசியல் அற்புதங்கள் அவரது வாழ்நாளில் பல உண்டு .

வெறும் அரசியல்வாதி தேர்தலையே எண்ணுகிறான் . அரசியல் ஞானியோ வரும் தலைமுறையை எண்ணுகிறான் .

by Swathi   on 21 Aug 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.