LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- திருவாசகம்

ஆசைப்பத்து - ஆத்தும இலக்கணம்

 

கருடக்கொடியோன் காணமாட்டாக் கழற்சே வடியென்னும் 
பொருளைத் தந்திங் கென்னை யாண்ட பொல்லா மணியையோ 
இருளைத் துரந்திட் டிங்கே வாவென்றங்கே கூவும் 
அருளைப் பெறுவான் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 418 
மொய்ப்பால் நரம்பு கயிறாக மூளை என்பு தோல் போர்த்த 
குப்பாயம்புக் கிருக்க கில்லேன் கூவிக்கொள்ளாய் கோவேயோ 
எப்பா லவர்க்கும் அப்பாலாம் என்னாரமுதேயோ 
அப்பா காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 419 
சீவார்ந் தீமொய்த் தழுக்கொடு திரயுஞ் சிறுகுடில் இது சிதையக் 
கூவாய் கோவே கூத்தா காத்தாட் கொள்ளுங் குருமணியே 
தேவா தேவர்க் கரியானே சிவனே சிறிதென் முகநோக்கி 
ஆவா வென்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 420 
மிடைந்தெலும் பூத்தை மிகக்கழுக் கூறல் வீறிலி நடைக்கூடம் 
தொடர்ந்தெனை நலியத் துயருறு கின்றேன் சோத்தம் எம்பெருமானே 
உடைந்துநைந் துருகி உன்னொளி நோக்கி உன்திரு மலர்ப்பாதம் 
அடைந்து நின்றிடவும் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 421 
அளிபுண்ணகத்துப் புறந்தோல் மூடி அடியேனுடையாக்கை 
புளியம் பழமொத் திருந்தேன் இருந்தும்விடையாய் பொடியாடி 
எளிவந்தென்னை ஆண்டுகொண்ட என்னாரமுதேயோ 
அளியேன் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 422 
எய்த்தேன் நாயேன் இனியிங் கிருக்ககில்லேன் இவ்வாழ்க்கை 
வைத்தாய் வாங்காய் வானோர் அறியா மலர்ச்சே வடியானே 
முத்தா உன்றன் முகவொளி நோக்கி முறுவல் நகைகாண 
அத்தா சால ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 423 
பாரோர் விண்ணோர் பரவியேத்தும் பரனே பரஞ்சோதி 
வாராய் வாரா வுலகந்தந்து வந்தாட்கொள்வானே 
பேராயிரமும் பரவித் திரிந்தெம் பெருமான் என ஏத்த 
ஆரா அமுதே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 424 
கையால் தொழுதென் கழற்சே வடிகள் கழுமத் தழுவிக்கொண்டு 
எய்யா தென்றன்தலைமேல் வைத்தெம்பெருமான் பெருமானென்று 
ஐயா என்றன் வாயா லரற்றி அழல்சேர மெமுகொப்ப 
ஐயாற் றரசே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 425 
செடியா ராக்கைத் திறமற வீசிச் சிவபுரநகர்புக்குக் 
கடியார் சோதி கண்டுகொண்டென் கண்ணினை களிகூரப் 
படிதா னில்லாப் பரம்பரனே உன்பழஅடியார் கூட்டம் 
அடியேன் காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 426 
வெஞ்சேலனைய கண்ணார்தம் வெகுளிவலையில் அகப்பட்டு 
நைஞ்சேன் நாயேன் ஞானச் சுடரே நானோர் துணைகாணேன் 
பஞ்சேரடியாள் பாகத்தொருவா பவளத் திருவாயால் 
அஞ்சேல் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 427 

 

கருடக்கொடியோன் காணமாட்டாக் கழற்சே வடியென்னும் 

பொருளைத் தந்திங் கென்னை யாண்ட பொல்லா மணியையோ 

இருளைத் துரந்திட் டிங்கே வாவென்றங்கே கூவும் 

அருளைப் பெறுவான் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 418 

 

மொய்ப்பால் நரம்பு கயிறாக மூளை என்பு தோல் போர்த்த 

குப்பாயம்புக் கிருக்க கில்லேன் கூவிக்கொள்ளாய் கோவேயோ 

எப்பா லவர்க்கும் அப்பாலாம் என்னாரமுதேயோ 

அப்பா காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 419 

 

சீவார்ந் தீமொய்த் தழுக்கொடு திரயுஞ் சிறுகுடில் இது சிதையக் 

கூவாய் கோவே கூத்தா காத்தாட் கொள்ளுங் குருமணியே 

தேவா தேவர்க் கரியானே சிவனே சிறிதென் முகநோக்கி 

ஆவா வென்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 420 

 

மிடைந்தெலும் பூத்தை மிகக்கழுக் கூறல் வீறிலி நடைக்கூடம் 

தொடர்ந்தெனை நலியத் துயருறு கின்றேன் சோத்தம் எம்பெருமானே 

உடைந்துநைந் துருகி உன்னொளி நோக்கி உன்திரு மலர்ப்பாதம் 

அடைந்து நின்றிடவும் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 421 

 

அளிபுண்ணகத்துப் புறந்தோல் மூடி அடியேனுடையாக்கை 

புளியம் பழமொத் திருந்தேன் இருந்தும்விடையாய் பொடியாடி 

எளிவந்தென்னை ஆண்டுகொண்ட என்னாரமுதேயோ 

அளியேன் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 422 

 

எய்த்தேன் நாயேன் இனியிங் கிருக்ககில்லேன் இவ்வாழ்க்கை 

வைத்தாய் வாங்காய் வானோர் அறியா மலர்ச்சே வடியானே 

முத்தா உன்றன் முகவொளி நோக்கி முறுவல் நகைகாண 

அத்தா சால ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 423 

 

பாரோர் விண்ணோர் பரவியேத்தும் பரனே பரஞ்சோதி 

வாராய் வாரா வுலகந்தந்து வந்தாட்கொள்வானே 

பேராயிரமும் பரவித் திரிந்தெம் பெருமான் என ஏத்த 

ஆரா அமுதே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 424 

 

கையால் தொழுதென் கழற்சே வடிகள் கழுமத் தழுவிக்கொண்டு 

எய்யா தென்றன்தலைமேல் வைத்தெம்பெருமான் பெருமானென்று 

ஐயா என்றன் வாயா லரற்றி அழல்சேர மெமுகொப்ப 

ஐயாற் றரசே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 425 

 

செடியா ராக்கைத் திறமற வீசிச் சிவபுரநகர்புக்குக் 

கடியார் சோதி கண்டுகொண்டென் கண்ணினை களிகூரப் 

படிதா னில்லாப் பரம்பரனே உன்பழஅடியார் கூட்டம் 

அடியேன் காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 426 

 

வெஞ்சேலனைய கண்ணார்தம் வெகுளிவலையில் அகப்பட்டு 

நைஞ்சேன் நாயேன் ஞானச் சுடரே நானோர் துணைகாணேன் 

பஞ்சேரடியாள் பாகத்தொருவா பவளத் திருவாயால் 

அஞ்சேல் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 427 

 

by Swathi   on 25 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.