LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மரணத்துள் வாழ்வோம்

ஆதரே...!

ரன் மெனிக்கே...!
எனது குரலை நீ கேட்டல் கூடுமா?
இதயத்தின் அடியிலிருந்து
நான் கதறும் ஓலம்
உன் செவிகளுக்கு எட்டுமா நண்பி?

நீ 'ரைப்' அடிக்கும் மேசை
எனக்கு முன்னால் இருந்ததால் மட்டுமா
நீ எனக்கு நண்பியானாய்?
ஒவ்வொரு காலையும் மாலையும்
யந்திரமாய் ஒன்றாய் ஓடிக் களைத்து
நொ¢சலான பஸ்சினுள் பயணம் செய்வதாலா?
அலுவலக நண்பர் குழாமுடன்
'பிக்னிக்' போகையிலும்
சிறீபாத மலையின் படிகளிலும்
ஒன்றாய்க் குடித்த 'கொக்கோக்கோலா'வா
எம்மை நண்பர்களாக்கியது?

மனித உறவுதான்
மனிதம் படைத்த உன்னத உறவுதான்
உனது காதலையும் எனது காதலையும்
ஒளிர்வித்தது.
'ஆதரே' என்ற உனது ஒவ்வொரு சொல்லிலும்
மனிதம் மிளிர்ந்தது நண்பி.

அன்று -
எ¡¢ந்த என் உடைமைகளுடன்
உனது மணிமணியான கடிதங்களுந்தான்
சாம்பராயிற்று.
ஒரே கா¢க்குவியல் நண்பி.
நெருப்புச் சுவாலைகளுக்கும்
புகைமண்டலங்களுக்கும் நடுவே
இறுதியாய் நான் பாதுகாத்து வைத்திருந்த
எனது பிறந்தநாளுக்கு
நீ தந்த 'சேட்'டையும் இழந்து
உள்ளங்கியுடன் மட்டும்
ஒவ்வொரு காலையும் மாலையும்
நீயும் நானும் யந்திரமாய்
ஓடுகின்ற பம்பலப்பிட்டித் தெருவில்
ஓடியபோது...

கண்ணீரும் வற்றிய நிலையில்,
மெனிக்கே
மனிதம் - மனித உறவு -
உறவுகளின் உன்னதம்
காதல் - ஆதரே

ஒரு கணப்பொழுதில்
மெனிக்கே
கையில் அலா¢ப் பூக்கொத்துடன் -
வெள்ளைச் சேலையுடன் - நீயும்,
வெள்ளை உடுப்புடன் நானும்,
'பன்சலை' போனது
நினைவில் ஓடியது.
சாந்தமான புத்த பகவானின்
புனித முகமும்
நீ வணங்கிய விதமும்...
அந்த இனிய மாலை.

'மகே ஆதரே'
ரன் மெனிக்கே
என் நெஞ்சினுள்
மனிதம் - மனிதஉறவு
சந்தேகமானது என உணர்கிறேன்
எனது குரலை நீ கேட்டல் கூடுமா?
இதயத்தின் அடியிலிருந்து
நான் கதறும் ஓலம்
உனக்குக் கேட்கிறதா ரன் மெனிக்கே?

by Swathi   on 26 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.