டிசம்பர் 5ல் சித்த மருத்துவத்திற்கு ‘ஆயுஷ் எக்ஸலன்ஸ் விருது’
தமிழர்களின் பாரம்பரிய மருத்துவம் ‘சித்த மருத்துவம்’ ஆகும். இது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டது. பல மருத்துவ முறைகளால் கைவிடப்பட்ட நோயாளிகளையும் சித்த மருத்துவம் குணப்படுத்தி இருக்கிறது, குணப்படுத்திக் கொண்டும் வருகிறது. இந்த கொரோனா காலகட்டத்தில் சித்த மருத்துவத்தின் பங்கு அளப்பரியது. இந்த இக்கட்டான காலத்தில் சித்த மருத்துவத்தின் சிறப்பை மக்கள் உணர்ந்து வருகின்றனர்.
அவ்வகையில் சித்த மருத்துவத்தைச் சிறப்பிக்கும் வகையிலும், சித்த மருத்துவத்தை விரிவு படுத்தவும், சித்த மருத்துவத்தைக் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையிலும் உலகத் தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு இணைந்து, தமிழரின் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்திற்கு ஆயுஷ் எக்ஸலன்ஸ் விருதை வருகின்ற டிசம்பர் 5ம் தேதி சென்னையில் வழங்க உள்ளன. இதில் மாநில, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்கள், அரசு செயலாளர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
|