LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ

அப்துல் கலாம்

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ,

ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் .


இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி , இந்திய ஏவுகணை நாயகன் என அப்துல் கலாம் ( Abdul Kalam ) அவர்களை அழைக்கின்றனர் . இவர் தொழில் நுட்ப வல்லுநர் , சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கத்தக்க அற்புதமான பேச்சாளர் . மாணவர்களை சந்தித்து அவர்களுடன் அறிவியல் உரையாடுவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் . அவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் பிறந்தார் . தனது விண்வெளி பொறியியல் படிப்பை சென்னையில் உள்ள எம் . ஐ . டி . யில் முடித்தார் .1960 ஆம் ஆண்டில் ஒரு விஞ்ஞானியாக தனது ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கினார் . இந்திய ராணுவத்திற்கு ஒரு சிறிய ஹெலிகாப்டரை வடிவமைத்துக் கொடுத்தார் .

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் தனது ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார் .1980 ஆம் ஆண்டில் SLV III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி -1 என்ற செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதன் மூலம் பிரபலம் அடைந்தார் . இவர் இந்தியாவின் 11 ஆவது குடியரசுத் தலைவராக 2002 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார் . இவரை மக்களின் ஜனாதிபதி என்று அழைக்கும் அளவிற்கு மக்களிடம் நெருக்கமாகப் பழகினார் . இவர் இந்தியாவின் உயரிய விருதுகளான பத்ம விபூசன் , பாரத ரத்னா விருதுகளைப் பெற்றுள்ளார் . கனவு காணுங்கள் , அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள் என இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார் .

by Swathi   on 02 Dec 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.