புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசி மரணம்
குணச்சித்திர நடிகர் மீசை தவசி அவர்கள் மதுரையைச் சேர்ந்தவர். ‘கிழக்கு சீமையிலே’ படத்தில் அறிமுகமான இவர் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் பிரபலமானார். கோவில் பூசாரி, பஞ்சாயத்து உறுப்பினர் எனப் பல துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்தவர். இவருடைய மீசையும், கம்பீரமான தோற்றமுமே இவருக்கு அடையாளமாக இருந்தது. உணவுக்குமாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் உடல் மெலிந்து, மீசை, முடி அனைத்தும் இழந்து மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிவகார்த்திகேயன், சூரி, ரோபோ சங்கர், விஜய் சேதுபதி, சிம்பு என நடிகர்கள் பலர் வந்து பொருளாதார ரீதியாக இவருக்கு உதவி செய்தனர். தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு இவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையினர் மட்டுமல்லாது பலரும் இவரது மறைவுக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
|